tamilnadu

img

மாநில அளவிலான கட்டுரை போட்டி: அரசு பள்ளி மாணவி முதலிடம்

தாராபுரம், மார்ச் 11- சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கட்டுரை போட்டியில் தாராபுரம் அரசு பள்ளி மாணவி முதலிடம் பெற்றுள்ளார். ஜேஆர்சி நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை யில் பிப். 28ஆம் தேதியன்று மாநில அளவில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில், திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் ஒன்றியம், நரசிங்காபுரம் ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும்  ந.கோமதி என்ற மாணவி கட்டுரை போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றுசாதனை படைத்தார். இம்மாணவிக்கு பள்ளி  தலைமையாசிரியர் குருசாமி வாழ்த்து தெரிவித்தார்.  மேலும், நஞ்சியம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி  மாணவி எம்.பூமிகா கட்டுரைப் போட்டியில் முன்றாம் இடம் பிடித்தார். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஜேஆர்சி ஆலோசகர்கள், தலைமையாசிரியர்கள், கல்வித்துறை அலு வலர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

;