திருப்பூர், நவ. 22- தமிழகத்தில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில கிரிக்கெட் அணிக்கு பல்லடம் அருகே அருள்புரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர்.சஞ்சய்குமார் தேர்வு பெற்றுள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான 19 வயதுக்கு உட்பட்டோர் கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்ந்தெடுக்கும் போட்டிகள் தேனி மாவட்டத்தில் நடத்தப்பட்டன. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 240 பேர் கலந்து கொண்டதில் 16 பேர் தேர்வு பெற்றனர். அதில் ஒருவராக அருள்புரம் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் சஞ்சய்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது தந்தை ரங்கசாமி, தாய் பவித்ரா. இவர்கள் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மாநில கிரிக் கெட் அணிக்கு தேர்வு பெற்ற சஞ்சய்குமார் தனது பெற்றோ ருடன் திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.