தருமபுரி, ஆக.13- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு நடைபெறுவதையொட்டி, செவ்வாயன்று ஒசூரில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சுவாதி-நந்தீஸ் நினைவு சுடர் பிரச்சார பயணத்துக்கு தருமபுரியில் உற் சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி 3ஆவது மாநில மாநாடு ஆகஸ்ட் 15ந் தேதி முதல் 17 ந் தேதி வரை தஞ்சாவூரில் நடைபெற உள்ளது. இம் மாநாட்டிற்கான சுடர் பயணங்கள் தமிழகத்தில் 5 முனைகளில் இருந்து செவ்வா யன்று துவங்கியது. அதன்ஒருபகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டம் சுடுகொண்ட பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சுவாதி மற்றும் தலித் இளைஞரான நந்தீசை சாதி மறுப்புதிருமணம் செய்து கொண்டார். இதனால் சுவாதியின் பெற்றோர்களால், இருவரையும் ஆணவப் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் நினைவாக சுவாதி -நந்திஸ் ஆணவப் படுகொலைக்கு எதிர்ப்பு சுடர் பயணம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் துவங்கி தருமபுரி மாவட்டம் வந்தடைந்தது.
தருமபுரி தொலைபேசி நிலையம் அருகில் சுடர் பயணத் திற்கு வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் டி.மாதையன் தலைமை வகித்தார். சுடர்பயணக் குழு தலை வர்கள் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செய லாளர் ஆறுமுகம், மாநில துணைத்தலைவர் பி.டில்லிபாபு, மாவட்டத் தலைவர் டி.எஸ்.ராமச்சந்திரன், மாவட்டப் பொருளாளர் கோவிந்தசாமி மற்றும் நிர்வாகிகள் மாரியப்பன்,செல்வராஜ்,ரவி,வெள்ளிங்கிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், நகரச் செயலாளர் ஆர்.ஜோதிபாசு, ஒன்றியச் செய லாளர் என்.கந்தசாமி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச்செயலாளர் எம்.முத்து, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கிரைஸாமேரி,சிஐடியு மாவட்ட செய லாளர் சி.நாகராசன்,விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.ஆறுமுகம், எல்ஐசி ஊழியர் சங்க கோட்ட செயலாளர் ஏ.மாதேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். நிறைவாக மகேந்திரன் நன்றி கூறினார்.