போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
உதகை,பிப்.11- மாநில அரசு, ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும் என்று போக்கு வரத்து தொழிலாளர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய உயர்வு பேச்சுவார் த்தையை உடனே துவங்க வேண் டும். நிலுவையில் உள்ள டிஏ-வை அரசு உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் உதகையில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தின் முன்பு திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எல்பிஎஃப் போக்குவரத்து மண்டல பொதுச் செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சம்மேளன உறுப்பினர் பரமசிவம், சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்கத் தின் துணை பொதுச் செயலா ளர் கணேசன், ஏஐடியூசி தொழிற் சங்கத்தின் மண்டல பொருளாளர் மாணிக்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினார். இதில் ஏராள மான போக்குவரத்து ஊழியர்கள் கலந்து கொண்டு மாநில அரசு சம்பள பேச்சு வார்த்தையை உடனே துவங்கிட வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.