நாமக்கல், ஜூலை 2- பரமத்தி வேலூர் அருகிலுள்ள இலங்கை அகதி முகாமில் வசிக்கும் மக்கள் இந்திய குடியுரிமை கேட்டு ஆட்சியர் அலு வலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே இலங்கை அகதிகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 30 ஆண்டுகால மாக 240 குடும்பத்தினர் வசித்து வருகின் றனர். கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுவரும் இவர்கள், பிறந்து, வளர்ந்து, கல்வி பயின்று வாழ்ந்து வரும் தங்கள் குழந்தைகள் இந்திய நாட் டின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் வர லாறு அறிந்தவர்கள். குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். தங்களை இந்திய பிரஜையாக அறிவிக்க வேண்டும் என 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சி யரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.