கட்டுமான நலவாரிய திட்டங்களை சட்டதொகுப்பு என்கிற பெயரால் சீர்குலைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து சிஐடியு கட்டிடம் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கோவையில் கட்டிட தொழிலாளர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.மனோகரன், பொதுச்செயலாளர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.