கோவை மாநகராட் சியில் மக்கள் தொகை 2011ல் 15,60,484. தற்சமயம் 17,99,874 என கூறப்படுகிறது. இதில் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்தவர்களான ஒடுக் கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 3,35, 915 ஆகும். சுவச் பாரத் எனப்படும் தூய்மை இந்தியா மற்றும் ஸ்மார்ட் சிட்டி எனப்படும் பொழிவுறு நகரம் திட்டம் அமலானதைத் தொடர்ந்து ஆண்டிற்கு சுமார் 3,500 கோடி ரூபாய் செலவி டப்படுகிறது. நகர்ப்புறங்களை நோக்கி வரும் மக்களுக்கு தேவையான வசதி களை செய்து கொடுக்கிறோம் என அறி விக்கப்பட்டுள்ள தொலை நோக்குத் திட்டங்களாக ஸ்மார்ட் சிட்டியும், அம்ரூத் திட்டங்களும் செயல்படுத்த படுகின்றன. இதன் மூலம் கடந்த 3 ஆண்டுகளாக சுமார் 10 ஆயிரம் கோடி வரவு செலவு மாநகராட்சியின் மூலம் நடைபெற்றுள்ளது. ஆனால் இத்திட் டங்களால் மாநகரத்திலுள்ள சேரி வாழ் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் எதுவும் இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.உதாரணத்திற்கு 58ஆவது வார்டுக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியைக் கூறலாம். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கமலா மில் பகுதியில் வசித்து வந்த மக்கள், அப் போது பெய்த பலத்த மழையின் காரணமாக அப்பகுதி முழுவதுமாய் சேதமானதால் தொடர்ந்து அங்கு வசிக்க முடியாத நிலைஏற்பட்டது.இத னால் பாதிக்கப்பட்ட மக்களை இப்பகுதியில் மறுகுடியமர்த்தியது. தொடர்ந்து தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டது. மின் இணைப்பு வழங்கப் பட்டது. ரேசன் குடும்ப அட்டை, வாக்கு உரிமை வழங்கப்பட்டுள் ளது. வீட்டு வேலை, துப்புரவு பணி, கட்டுமானம் உள்ளிட்ட கூலி வேலைக்கு சென்று வரும் இவர் கள் தற்சமயம் 350க்கும் மேற்பட்ட குடும்பங்களாகி அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.
அத்தக்கூலி தொழிலாளர்களான இவர்களுக்கு கிடைக்கும் சொற்ப வரு மானத்தில் தங்கள் வீடுகளைப் பராமரிக்க முடியவில்லை. பலரது வீடு கள் குடியிருக்க முடியாத சிதலமடைந்த நிலையில்உள்ளது.எனவே, வேறு பகுதியில் வாடகைக்கு குடிபெயர்ந் துள்ளனர் சிலர்.இந்நிலையில் சுவத் பாரத் எனும் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் தனி நபர் கழிப்பிடங்கள் அமைத்துக் கொடுக்கப்படுகிறது. இத்திட்டம் இப் பகுதிக்கு எட்டிக்கூட பார்க்க வில்லை. குளிப்பதற்கு சில சிமெண்ட் ஓடுகளை சுவராக்கி மறைத்து குளியல றையாக்கிப் பயன்படுத்தி வருகின் றனர். பொதுக் கழிப்பிடம் அமைக்கப் பட்டுள்ளது. இதுவும் பராமரிப்பின்றி அருகிலுள்ள திறந்த வெளியே கழிப்பி டமாக மாறியுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் மக் களைச் சந்தித்த போது, 100 முறை மனு கொடுத்திருப்போம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. ரேசன் கார்டு கொடுத்தாங்க. ஓட்டு அட்டை கொடுத் தாங்க. ஆதார் கார்டு வாங்கச் சொன் னாங்க. தண்ணீர் வசதி செய்து கொடுத் துள்ளனர். சாக்கடை வசதி கூட செய்து கொடுத்துள்ளனர். ஆனால் நாங்கள் வாழும் வீட்டிற்கு பட்டா கொடுக்க மறுக்கின்றனர். இருக்கும் வீடுகளைப் பராமரிக்க இயலவில்லை. 50 சதவிகிதம் வீடுகள் இடியும் நிலையில் உள்ளது. அதனால் அண்மையில் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற தைப் போல அடுத்த பெருமழைக்கு எங்கள் பகுதியிலும் வீட்டிலேயே சமாதி ஆகும் நிலை வந்தாலும் ஆச்சரியப்படு வதற்கில்லை என்றனர். அதேவார்டின் மற்றொரு பகுதியில் 100 குடும்பங்கள் உள்ள நிலையில், வெறும் 36 வீடுகள் மட்டுமே உள்ளன. இத்தனை கட்சிகள் உள்ளன. ஆனால் எந்த கட்சியையும் நம்ப முடியவில்லை. ஒரே வீட்டில் இரண்டு மருமகள்கள் உள்ளனர். வயதானவர்களுக்கு உறங்க, ஓய்வெடுக்க இடமில்லை. இவ்வாறு தங்களது வேதனையைப் பகிர்ந்து கொண்டனர். நீங்களாவது எதாவது செய்யுங்கள். எங்கே அழைத் தாலும் அனைவரும் வருகிறோம் என்றனர்.
இதே போல் 59வது வட்டம் SIHS காலனி பகுதியிலும் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா இல்லை. இருக்கும் வீடுகளை பராம ரிக்க முடியவில்லை. எனவே, பேனர், படுதா, அரசியல் கட்சிகள் பயன்படுத் திய பிளக்ஸ் போர்டுகளால் மேற்கூரை யில் ஒழுகாமல் போத்தி வைத்துள் ளோம். ஆண்டு தோறும் பீமா செலுத்தி வருகிறோம். அனைத்து ஆவணங்கள் இருந்தாலும் எங்களுக்கு இன்னும் பட்டா வழங்க மறுக்கின்றனர் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். நடக்க பாதை இல்லாமல், சாக்கடையில் குழல் அமைத்து நடந்து வருகின்றனர். ஆனால் மற்றொரு பகுதியில் சென்று வர பாதை இருந்தாலும் அந்த வீட்டின் உரிமையாளர் அந்த நடைபாதையில் நடக்க அனுமதிப்பதில்லை என அப் பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். அதேபோல் அப்பகுதியில் குடிநீர் வசதி என்பது இல்லை. குடிநீர் என்பது 25 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே அதுவும் லாரியில் மட்டுமே வந்து குடிநீர் என்பது வழங்கப்படுகிறது. காசு கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். ஒரு வீட்டிற்கும் ஏராள மான பேரல்கள் உள்ளன என்றனர்.
இந்நிலையில், அடுத்த 5 ஆண்டுக ளில் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்து குடிநீர் தேவை, வடிகால் வசதி, திடக்கழிவு மேலாண்மை, போக்குவ ரத்து போன்ற அடிப்படை கட்டமைப்பு கள், கணினி வழி ஆளுமை, பொழுது போக்கு, தொழிற்பயிற்சி பெற்ற உள் ளாட்சி அமைப்புகளுக்கு செயல் பணி களையும், நிதியையும் பகிர்ந்து அளிப் பது, வரி வசூலில் மேம்பாடு, நீர் பயன் பாடு தணிக்கை போன்ற பணிகளும் செய்து கொடுக்கப்படும். சாலைகள் மேம்பாடு, மழைநீர் வடிகால் மற்றும் தெருவிளக்குகள் பராமரிக்கப்படும் எனக் கூறப்பட்டாலும், வைபை எனப் படும் கம்பியில்லா இணைய வசதியும் நகரின் பல பகுதிகளில் வழங்கப்பட்டா லும், நகரங்களை மேம்படுத்துகிறோம் என்னும் அரசுகள் கோவை போன்ற மாநகரங்களில் வசிக்கும் தலித் மக் களை அகதிகளைப் போல மாற்றாந் தாய் மனப்பான்மையுடனே நடத்தி வருகின்றன என்றால் மிகையல்ல! அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் மக்க ளுக்கு பட்டா வழங்கப்படும் என கடந்த ஆண்டு அரசாணை வழங்கப்பட்டது. மேலும் குடிசை மாற்று வாரியம், வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீடு கட்டித் தரப்படும் என்றும், கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 23 லட்சம் பட்டா வழங்கப்பட்டது என சட்டப்பேர வையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கோவையிலுள்ள இந்த மக்களுக்கு பட்டாவும் வழங்கப்படவில்லை. வீடும் கட்டித்தரப்படவில்லை.
- எஸ்.சக்திவேல்.