tamilnadu

img

கோவை அரசு கலைக் கல்லூரியில் எஸ்.எப்.ஐ போராட்டம்

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் பொதுத்தேர்வை ரத்து செய்ய கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

தமிழக அரசு சமீபத்தில் 5 மற்று 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் பொது தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.இதற்கு தமிழகத்தில் பல அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் தனது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இன்று மதியம் கோவை அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தினர். மேலும் இப்போராட்டத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பது மாணவர் நலன் சார்ந்தது அல்ல. இது மாணவர்களின் இடைநிற்றலை அதிகரித்து, எதிர்காலத்தை பாதிப்பதாக உள்ளது. ஆகவே தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்தனர்.
 

;