tamilnadu

பாலியல் வன்முறை தடைச்சட்டம் 2013 உட்புகார்குழு அமைக்கப்படாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

கோவை, ஜன. 29- பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன் முறை குறித்து விசாரிக்க பாலியல் வன்முறை தடைசட்டம் 2013-ன் படி உட்புகார் குழு அமைக்கப்படாத நிறுவனங்கள்  மீது நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரி வித்துள்ளதாவது, பணிபுரியும் இடங்களில் பெண்கள்  எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைகளை தடுப்பதற்காக பாலியல் வன்முறை தடைச்சட்டம் 2013 ஆண்டு முதல் மத் திய அரசால் நடை முறைபடுத்தப்பட்டது. இச்சட்டத்தில், பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை  குறித்து விசாரிக்க உட்புகார்குழு அனைத்து அரசுதுறை கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் அமைக்கப்பட வேண் டும் எனவும், அவ்வாறு அமைக்கப்படும் உட்புகார்குழு வின் தலைவராக ஒரு பெண் அலுவலறையே நியமிக்க வேண்டும் எனவும், இரண்டு நபர்களை உறுப்பினர்களாக வும், இத்துறையில் நன்கு பழக்கமான ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தினை உறுப்பினராக சேர்க்கப்பட வேண்டும் என விசாரணைக்கான வழிமுறைகள் வகுக் கப்பட்டுள்ளது.  இந்நிலையில் அரசு மற்றும் அனைத்து தனியார் நிறு வனங்களின் தலைமை அலுவலகங்களிலும் உட்புகார் குழு அமைத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக் கும் வகையில் உட்புகார் குழு விபரம் மற்றும் மத்திய அரசால் இணையதளத்தில் புகார் அளிக்கும் வகையில்  www.shebox.nic.in என்ற இணையதளம் உருவாக் கப்பட்டுள்ளது. இந்த விபரத்தினை அனைவரின் பார்வைக்கு படும்படியாக ஒட்டிவைக்க வேண்டும்.  மேலும் மேற்கண்ட நடவடிக்கைகளை செயல்படுத்தி  அதன் விபரத்தினை மாவட்ட ஆட்சியருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் எனவும், உட்புகார் குழுவின் மாதாந் திர அறிக்கையினை ஒவ்வொரு மாதமும் மாவட்ட சமூக நல அலுவலர் கோவை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  மேலும் உட்புகார் குழு அமைக்கப்படாத நிறுவ னங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உட் புகார் குழு அமைப்பது தொடர்பான விபரங்களை மாவட்ட  சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கம், கோயம்புத்தூர், என்ற முகவரியிலோ தொலை பேசி எண் 0422-2305126 மற்றும் பெண்கள் உதவி மையம் எண். 0422-2555126 என்ற எண்ணிலோதொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

;