tamilnadu

img

வீடுகளுக்குள் புகும் கழிவுநீர்: பொதுமக்கள் அவதி

கோவை, அக். 20- கோவை விவேகானந்தா பகுதியில் கழிவுநீர் வீடுகளுக்குள் புகுவதால் அப்பகுதி மக்கள் அவதியடைந்துள்ளனர். கோவை ராமானுஜ நகர் பகுதியை ஒட்டி யுள்ள பகுதி விவேகானந்தா நகர். இப்பகுதி யில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலை யில், இப்பகுதியில் கழிவுநீர் சாக்கடை அடைப்புகள் முறையாக அகற்றப்படாத தால் கழிவுநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து வருகிறது. மேலும், இந்த கழிவுநீரானது குடி நீர்த் தொட்டிகளிலும் கலந்து விடுவதால் நோய் தொற்றுகள் பரவும் அபாயமும் ஏற் பட்டுள்ளது. எனவே, இப்பிரச்சனை தொடர்பாக அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தட வேண்டுமென அப் பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.