tamilnadu

img

காலமானார்

திருப்பூர், ஏப். 21 -திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் சுமார் 20 ஆண்டு காலம் தீக்கதிர் நாளிதழ் விநியோகிப்பாளராக செயல்பட்ட மூத்த தோழர் எம்.பெரியசாமி (78) காலமானார்.திருப்பூர் தனலட்சுமி மில் தொழிலாளியாக வேலை செய்த பெரியசாமி சிஐடியு, மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினராக தீவிர பற்றுடன் செயல்பட்டவர். தீக்கதிர் நாளிதழின் விநியோகிப்பாளராக கருவம்பாளையம் பகுதியில் நீண்ட காலம் செயல்பட்டவர். வயது மூப்பு ஏற்பட்ட நிலையில் தாராபுரம் சாலை கொடுவாயில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 17ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.அவரது மறைவுச் செய்தி அறிந்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜகோபால் உள்ளிட்டோர் கொடுவாய் சென்று அவரது குடும்பத்தாரிடம் இரங்கல் தெரிவித்தனர். 

;