கோவை, நவ.3– சட்டப்படியான போனஸ் உரி மையை பறிக்கும் தமிழக அரசை கண்டித்து அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகங்க ளில் பணியாற்றும் தொழிலாளர்க ளுக்கு இந்தாண்டு 25 சதவிகிதம் போனாஸ் கொடுக்க வேண்டும் என தொழிற்சங்கம் கோரிக்கை வைத்து வந்த நிலையில், தமிழக போக்கு வரத்துத் துறை அமைச்சர் தன்னிச் சையாக பத்து சதவிகிதம் போனஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு 20 சதவிகிதம் போனஸ் வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பத்து சதவிகிதம் என் கிற பாராபட்ச அறிவிப்பு தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பை யும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றை காரணம் காட்டி சட்டப் படியான போனஸ் உரிமையை பறிக்கும் தமிழக அரசை கண்டித்து, அரசு போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
கோவை மேட்டுப்பாளையம் சாலை யிலுள்ள தலைமை பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் எல்பிஎப் பொருளாளர் சு.பாபு, சிஐடியு கோவை மாவட்ட அரசு போக்குவரத்து ஊழியர் சங்க தலை வர் மா.பரமசிவம், பொதுச்செயலா ளர் வேளாங்கண்ணி ராஜ், பொரு ளாளர் ஆர்.கோபால் மற்றும் ஏஐடி யுசி செல்வராஜ், டிடிஎஸ்எப் வில்லி யம்ஸ், எம்எல்எப் குமணன், ஐஎன்டி யுசி தவுலத்கான், ஏஏஎல்எப் விடு தலை ரவி உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி கோவையில் அனைத்து பணிமனை கள் முன்பும் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன.
சேலம்
சேலம் மெய்யனூர் பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு சங்கத்தின் கோட்ட பொது செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இதில், சிஐ டியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தின் துணை பொதுச் செயலாளர் செந்தில்குமார், எல்பிஎப் மத்திய சங்க நிர்வாகி பழனிவேலு, சிஐடியு துணைத் தலைவர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உடுமலை
திருப்பூர் மாவட்டம், உடுமலை போக்குவரத்து கிளை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு மாநில பொதுக்குழு உறுப்பினர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். இதில் போக்குவரத்து தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.