tamilnadu

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை போக்சோவில் வாலிபர் கைது

கோவை, பிப். 15- பொள்ளாச்சி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன் கொடுமை செய்த வாலிரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஜோதி நகரை சேர்ந்தவர் சேக்பீர் என்ற யாசின் (20). ஆட்டோ டிரை வரான இவர், அரசு பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 16 வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால், கர்ப்பமடைந்த அந்த மாணவி, யாசினிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு யாசின் மறுத்த துடன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இத னையடுத்து அந்த மாணவி பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகா ரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து காவல் துறையினர் நடத்திய விசார ணையில் பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி யாசின் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதைய டுத்து காவல் துறையினர் யாசினை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

;