தருமபுரி, ஆக.4- தருமபுரி புத்தகத் திருவிழாவில் அறிவுசார் கருத்தரங்கம் நடை பெற்றது. “தமிழ் தலைமைத்துவம்” எனும் தலைப்பில் மூத்த பத்திரிக்கை யாளர் சமஸ் பேசியதாவது, நம் சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. சாதி,மதம் இல்லை என்று பேசும் தலைவர்கள் சாதியை ஒழிக்க தன் சொந்த வாழ்க்கையில் முன்னு தாரணமாக சமூகத்தில் திகழ வேண்டும். எளிய முதல்வர் காம ராசர் என்று சொல்கிறோம். அதே போன்று அண்ணாவும் எளிமை யாக வாழ்ந்தார், இறக்கும் போது கடனாளியாகத்தான் இறந்தார். மக்கள் இவர்களின் எளிமையையும் போற்றவேண்டும். அரசியல் சாக்கடை என்று சொல்லிவிட்டு ஒதுங்கிவிட கூடாது.குற்றமும் சொல்லக் கூடாது. அரசியல் சாக்கடை என்று ஒதுங்கிவிடாமல் தம்மால் அரசி யலில் மாற்றத்தை நிகழ்த்த என்ன செய்ய முடியும் என்பதை பார்க்க வேண்டும்.தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆண்ட பிறகு தான் கீழ் தட்டு சமூக மக்கள் முதல்வராகவும், தலைவராகவும் திகழ்ந்தனர் என பேசினார். “டிஜிட்டல் போதையும், மனித உறவுகளும்” எனும் தலைப்பில் மருத்துவர் சிவபாலன் பேசிய தாவது, தமிழகத்தில் இதுபோன்ற புத்தகத் திருவிழாக்களின் தேவை தற்போது அதிகரித்துள்ளன. மாநி லத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இத்திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும். ஏனெனில், எதுவும் வெற்றிடமாக இருப்பது ஆபத் தானது. அதுவும் அறிவுசார் வெற்றிடம் என்பது பேராபத்து. இந்த வெற்றிடம் இளைஞர்களின் கருத்தியல் பேதமையை அதிக ரிக்கும். இது அவர்களை தீய வழி களில் மடைமாற்றிவிடும். இதனைத் தவிர்க்கும் பணியை புத்த கங்கள் செய்யும். தனிமனிதனின் பிரச்சனைகள் இச்சமூகத்தையும் பாதிக்கும். தற்போதைய டிஜிட்டல் சாத னங்களின் அதீத பயன்பாடு மனி தனை தனிமைப்படுத்துகிறது. ஒருவரோடு ஒருவர் உறவாட வைப் பதில்லை.
குழந்தைகள் இத்தகைய சாதனங்களை பயன்படுத்துவதால், அதில் அவர்கள் மூழ்கிப் போகின் றனர். இதனால் பல்வேறு சிக்கல் களில் சிக்கித் தவிக்கின்றனர். பிரச்ச னைகள் ஏற்பட்டு, அதனைத் தீர்க்க வழி தெரியாமல் தற்கொலை செய்து கொள்ளும் வரை டிஜிட்டல் சாத னங்கள் அவர்களை கொண்டு செல் கின்றன. சில பத்தாண்டு முன்பு நிகழ்ந்த தற்கொலை எண்ணிக்கைகள் தற் போது அதிகரித்து உள்ளன. எனவே, இது ஒருவகையில் போதை என கூறலாம். மேலும், அதையும் கடந்து அச்சாதனங்களுக்கு அடி மையாவது எனலாம். இதனால், மனிதன் உண்மை உலகத்தி லிருந்து, வேறு உலகத்தில் மூழ்கிப் போகிறான். உண்மை உலகம் நம்மை அரவணைக்கும். டிஜிட்டல் சாதனங்கள் நம்மை புறக்கணிக்கும். இருப்பினும், இச்சாதனங்கள் அறி வியல் ரீதியாகவும், தொழில்நுட்ப வகையிலும் நமக்கு ஏராளமான நன்மைகளை தருகின்றன.
இதனை முற்றாக புறக்கணிக்க இயலாது. எனவே, இதன் பயன்பாட்டை முறைப்படுத்த வேண்டும். இச்சா தனங்களை பயன்படுத்துவதில் நேரக் கட்டுப்பாடு இருத்தல் வேண்டும். குறிப்பாக 12 வயதுக் குள்பட்ட குழந்தைகளுக்கு இத் தகைய சாதனங்களை வழங்கக் கூடாது. அதேபோல, 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பயன் பாட்டுக்கு வழங்கும்போது அவை நமது மேற்பார்வையில் இருக்கும் படி வைத்துக்கொள்ள வேண்டும். இத்தகைய சுய கட்டுப்பாடுகளால் டிஜிட்டல் போதையிலிருந்து விடு வித்து மனித நேயமிக்க சமூகத்தை உருவாக்க முடியும் என பேசினார். முன்னதாக் நிகழ்ச்சிக்கு வரு வான் வடிவேலன் கல்வி நிறுவ னங்களின் நிறுவனர் வருவான் வடிவேலன், ரங்கா பல்பொருள் அங்காடி உரிமையாளர் இரா.துரை ஆகியோர் தலைமை வகித்தனர். ஓய்வுபெற்ற பொறியாளர் எம்.கார்த்திகேயன் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தருமபுரி மாவட்டச் செயலர் ஏ.குமார், அரூர் சட்டப்பேரவைத் தொகுதி முன் னாள் உறுப்பினர் பி.டில்லிபாபு, ஆசிரியர் ச.அறிவுமணி, அரசு ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.