tamilnadu

img

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை- கைது

சேலம், மார்ச் 11- குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டபேரவையில் தீர்மா னம் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 2 ஆயிரத் துக்கு மேற்பட்ட இஸ்லாமியர்களை போலீசார் கைது செய்தனர்.  குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை தமிழகத்தில் நடை முறைபடுத்தமாட்டோம் என தமி ழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் தொடர்ந்து 24 ஆவது நாளாக 200க்கும் மேற்பட்ட பெண் கள் தொடர் முழக்கப் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் இக்கோரிக் கையை வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்பினர் புதனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனர். இதனைய டுத்து மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் தலைமையில் 500க் கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப் பட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு இரண்டு அடுக்கு பாதுகாப்பு  போடப்பட்டது.

மேலும் ஆட்சி யர் அலுவலகம் வழியாக செல்லும் அனைத்து சாலைகளிலும் தடுப்பு கள் ஏற்படுத்தி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.  இதனிடையே கோட்டை மைதா னத்திலிருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சமை யல் பாத்திரங்கள், பாய், தலை யணை ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர் வலமாக வந்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடியிருப்பு போராட் டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால், பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்த போலீசார் ஊர்வலமாக வந்தவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்ட காரர்கள் அனைவரும் ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதையடுத்து போராட்டத் தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.  இப் போராட்டத்தால் ஆட்சியர் அலுவல கத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.