tamilnadu

தருமபுரி ,திருச்செங்கோடு ,நாமக்கல் ,சேலம் முக்கிய செய்திகள்

எஸ்.தாதம்பட்டி, திப்பிரெட்டிஅள்ளி கிராமங்களில் மக்கள் தொடர்பு முகாம்

தருமபுரி, ஆக.22- தருமபுரி மாவட்டம்,  அரூர் வட்டம் எஸ். தாதம்பட்டி மற்றும் தருமபுரி வட்டத் திலுள்ள திப்பிரெட்டி அள்ளி கிராமங்களில் வருகிற ஆகஸ்ட் 29ந் தேதியன்று காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்  நடைபெற உள்ளது. எஸ்.தாதம்பட்டியில் நடைபெறும் முகா மிற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தலைமை வகிக்கிறார். இம்முகாமில் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து  கொண்டு தங்களது துறைகளின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க உள்ளனர். எனவே தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், தீர்த்த மலை  உள்வட்டத்திலுள்ள  எஸ்.தாதம் பட்டி கிராமம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கைகளை மனுக்கள் அளித்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தெரிவித்துள்ளார். இதேபோல் தருமபுரி வட்டம்,  திப்பி ரெட்டி அள்ளி கிராமத்தில் நடைபெறும் முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரகமத்துல்லா கான் கலந்து கொள்ள உள்ளார். இம்முகாமில் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறைகளின் திட்டங்கள் குறித்து எடுத்து ரைக்க உள்ளனர். எனவே தருமபுரி  வட்டம்,   கிருஷ்ணாபுரம்  உள் வட்டம்,   திப்பிரெட்டி அள்ளி கிராமம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக் களை வழங்கி பயன்பெறுமாறு மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லா கான்  தெரிவித்துள்ளார்.

 கிராமப்புறங்களின் தனித்துவ செயல்பாடுகளே  நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்

திருச்செங்கோடு, ஆக.22- இந்திய அரசாங்கத்தின் மனித வள மேம்பாடு அமைச் சகத்தின் கீழ் அமைந்துள்ள தேசிய மகாத்மா காந்தி கிராமப்புற கல்வி மேம்பாட்டு இயக்கம் மற்றும் திருச் செங்கோடு கே.எஸ்.ஆர் தொழில்நுட்பக்கல்லூரி இணைந்து பேராசிரியர்களுக்கான கிராமப்புற பயிற்சி முகாம் கே.எஸ்.ஆர்.தொழில்நுட்பக் கல்லூரியில் புதனன்று துவங்கியது.  இதன் தொடக்க விழாவில் மகாத்மா காந்தி தேசிய கிராமியக் கல்விக்கழக தலைவர் மற்றும் மத்திய மனித  வள மேம்பாட்டுத்துறை சிறப்பு ஆலோசகர் முனைவர். திவா கரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கிராமங் களின் தனித்துவம் பெற்ற சமூக செயல்பாடுகள் நிலையான மற்றும் வளம் குன்றாத வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதை வலியுறுத்தினார். மேலும் மத்திய அரசு மற்றும் மாநில அரசின் கிராமப்புற வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் மற்றும் நெறிப்படுத்தும் வழிமுறைகளை இன்றைய இளைய தலைமுறை முறையாகச் செயல்படுத்தவேண்டும் என்றார். இம்முகாமில் உயர்தொழில்நுட்பத் துறையின் தலைவர்  எழுதிய குழந்தைகள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நூல் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் தலைவர் கே.எஸ்.ரங்கசாமி, துணைத்தலைவர் சீனிவாசன், முதன்மை செயல் அலுவலர் தியாகராஜா, முதல்வர் குமார வேல், கோவை பாரதியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் பொன்முருகன், துறைத்தலைவர் பிலிப் ராபின்சன் மற்றும்  ஒருங்கிணைப்பாளர் அய்யப்பதாசன் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். 

நீர் மேலாண்மை குறித்த  கிராம சபைக் கூட்டம்

நாமக்கல், ஆக.22- நாமக்கல் மாவட்டத்தில் வரும் சனியன்று நீர் மேலாண்மை குறித்த சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடை பெறுகிறது.  இது குறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சி களிலும் வரும் ஆக.24 (சனிக்கிழமை) நீர் மேலாண்மை இயக்கம் குறித்த சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், நீர் பாதுகாப்பு மற்றும் மழை நீர் சேமிப்பை முதன்மைக் குறிக்கோளாக கொண்டு, நீர்ப் பற்றாக்குறையுள்ள பகுதிகளில், ஜல் சக்தி அபியான் என்ற  இயக்கத்தை இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டம் செப்டம்பர் 15  வரையிலும், இரண்டாம் கட்டம் வடகிழக்கு பருவமழைக் காலமான அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 வரையிலும் செயல்படுத்தப்பட உள்ளது. ஜல் சக்தி அபியான் இயக்கத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ள 5 செயல்பாடுகளில் பணிகள் மேற் கொள்ளப்பட இருக்கின்றன.  நீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு, ஏரிகளை புதுப்பித்தல், மீள் நிரப்பு கட்டமைப்புகளை மறு பயன் பாடு செய்தல், நீர் வடிப்பகுதி மேம்பாடு செய்தல், தீவிர  காடு வளர்ப்பு, ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கி வீடு களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்குவது உள்ளிட்டவை நடைபெறவுள்ளது. கிராம சபைக் கூட்டத்தில் இத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான விளக்கங்கள் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சேலம் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்

சேலம், ஆக.22- பள்ளி மாணவர்களிடையே விளை யாட்டு திறனை வளர்க்கும் வகையில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இடையிலான தடகள போட்டிகள் சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் வியாழ னன்று நடைபெற்றது. இப்போட்டியில் 40க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம், உயரம்  தாண்டுதல் மற்றும் தட்டு, குண்டு எறிதல்  உள்ளிட்ட தடகளப் போட்டிகள் நடை பெற்றன.  வியாழனன்று துவங்கி தொடர்ந்து இரு நாட்கள் போட்டிகள் நடைபெறுகிறது. இப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் அடுத்து மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.