அக்.14 ல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
உதகை, அக்.8- நீலகிரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் அக்டோபா் 14 ஆம் தேதியன்று தொடங்கும் என மாவட்ட ஆட்நியர் தெரிவித்துள்ளர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது, நீலகிரி மாவட்டத்திலுள்ள 45 ஆயிரம் பசு, எருமை இனங்களை கோமாரி நோய் தாக்குதலில் இருந்து காக்கும் வகையில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 17ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் அக்டோபா் 14 ஆம் தேதி முதல் நவம்பா் 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாடுகள், எருமை இனங்களுக்கு தடுப்பூசி போடும் நாள், இடம் குறித்த விவரங்கள் சம் பந்தப்பட்ட கால்நடை மருந்தகம் மூலமாக அந்தந்த கிராமங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும். மேலும், பொதுமக்கள் தங்கள் பகுதி கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகம், கால்நடை கிளை நிலையங்களைத் தொடா்பு கொண்டு இது குறித்து தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் தெரி வித்துள்ளார்.
கோவை அரசு மருத்துவமனையில்
டெங்கு மற்றும் காய்ச்சல் பாதிப்பில் 108 பேர் அனுமதி
கோவை, அக்.9- டெங்கு மற்றும் காய்ச்சல் பாதிப்பினால் கோவை அரசு மருத்துவமனையில் 108 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப் பினால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியா கினர். இதனையடுத்து சுகாதாரத்துறை பல்வேறு முயற்சிகளின் மூலம் காய்ச்சல்கள் பரவுவதை தடுத்தது. இதேபோல், காய்ச்ச லால் பாதிக்கப்படுபவர்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது தமிழகத்தில், தென்மேற்குப் பருவமழையை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு, வைரஸ் காய்ச்சல்கள் வேகமாக பரவி வரு கின்றன. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் டெங்கு, வைரஸ் காய்ச்சலுக்கு சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன் படி கோவை அரசு மருத்துவக் கல்லூரியி லும் காய்ச்சலுக்கென்றே சிறப்பு வார்டு கள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்லும் அளவில் 24 மணி நேரமும் செயல் படும் வார்டும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பில் 14 பேர் அனு மதிக்கப்பட்டுள்ளனர். மேலும், காய்ச்சல் பாதிப்பில் 94 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இதில் கோவையை சேர்ந்தவர் கள் 9 பேரும், மற்ற மாவட்டத்தை சேர்ந்த வர்கள் 5 பேரும், குழந்தைகள் 4 பேரும், பெரியவர்கள் 10 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், புதன்கிழமை மட்டும் 17 பேர் காய்ச்சல் பாதிப்பால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கோவை அரசு மருத்துவ மனை முதல்வர் அசோகன் செய்தியாளர் களிடம் கூறுகையில், காய்ச்சலால் யாரே னும் பாதிக்கப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். கோவை அரசு மருத்துவமனையை பொறுத் தவரை 24 மணி நேரமும் சிகிச்சை கொடுக் கும் வகையில் சிறப்பு வார்டுகள் அமைக்கப் பட்டுள்ளது. இதேபோல் இங்கு சிகிச்சைக் காக வரும் நோயாளிகளுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்திடுக பொதுமக்கள் கோரிக்கை
சேலம், அக்.9- சேலத்தில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனை உடனடியாக சீரமைக்குமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாநகரின் மையப்பகுதியில் பேர்லான்ஸ் சாலை உள்ளது. இந்த சாலையில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக குடிநீர் குழாய் உடைந்து வீணாகி வருகிறது. இப்பகுதி மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின்சார பேருந்து அறிவிப்பு - கவர்ச்சி திட்ட அறிவிப்பால் பயனில்லை
கே.ஆறுமுக நயினார் குற்றச்சாட்டு
கோவை, அக்.9– அரசு போக்குவரத்து கழகத்தின் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படாத சூழலில் தொழிலாளர் களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதுகுறித்த எந்த அக்கறையும் கொள் ளாத மாநில அரசு மின்சார பேருந்து போன்ற நடைமுறைக்கு ஒவ்வாத கவர்ச்சிகர திட்டங்களை அறிவிப்ப தால் எந்த பயனும் இல்லை என சிஐடியு அரசு போக்குவரத்து சம்மேளன பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் குற்றம்சாட்டினார். சிஐடியு கோவை மாவட்ட அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் செவ் வாயன்று நடைபெற்றது. இதில் பங் கேற்ற தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கே. ஆறுமுக நாயினார் செய்தியாளர்களி டம் பேசுகையில், அரசு போக்குவரத் துக் கழகங்களில் திருவிழா காலங்க ளில் சிறப்பு பேருந்துகள் இயங்கப்படு கின்றது. இந்த சிறப்பு பேருந்துகளை பணியில் இருக்கும் ஊழியர்களே கூடுதலாக இயக்கி வருகின்றனர். இத னால், அவர்கள் பல நாட்கள் ஓய்வின்றி இயக்க கூடிய அவலநிலையில் விபத்து களில் சிக்கி உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். தமிழக அரசுக்கு 8 போக்குவரத்துக் மண்டலங்கள் உள்ளது. இதில், 20 ஆயிரம்பேர் பணிபுரிகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக புதிய தொழி லாளர்கள் நியமனம் என்பது இல்லை. ஒரு வருடத்திற்கு 4 ஆயிரம் தொழி லாளர்கள் பணி ஓய்வு பெறுகின் றனர். இன்றைக்கு பணியாளர் பற்றாக் குறை அதிகமாக உள்ளது. இதன் கார ணமாக பணியாளர்களுக்கு கூடுதல் பணி சுமை கொடுப்பதால் விபத்துக் கள் நடக்கின்றது. தொழிலாளர்க ளுக்கு உரிய விடுப்புகள் கூட மறுக்கப் படுகின்றது. போதுமான தொழிலாளர் களை நியமனம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து போராடி வருகிறோம். இன்றைக்கு தொழிலாளர்களுக்கு போதுமான பாதுகாப்புகள் இல்லை. சென்னையில் பணிமனை இடிந்து விழுந்து தொழிலாளர்கள் பலியானார் கள். பணிமனை கட்டிடங்களை புதுப் பிக்க வேண்டும். இதுபோன்ற பணி களை மேற்கொள்ளாமல், கவர்ச்சிகர மான திட்டங்களை அறிவிக்கின்றனர். அதில் ஒன்றுதான் மின்சார பேருந்து அறிவிப்பு. மின்சார பேருந்துகளால் சுற்றுசூழல் பாதுகாப்பு, டீசல் சிக்கனம் ஆகியவற்றால் பலன் உண்டு. ஆனால், இந்தியாவில் மின்சார வாக னம் உற்பத்தி என்பது ஆரம்ப கட்டத் தில்தான் உள்ளது. மின்சார பேருந்து விலை ரூ.2 கோடிக்கு மேல். அதன் பரா மரிப்பு செலவும் அதிகம். இப்போது போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் உள்ளது. இந்நிலையில் மின்சார பேருந்தை வாங்க மத்திய அரசு கட்டாயப்படுத் துகிறது. அரசு பேருந்து கழகத்தை தனி யார் மயமாக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாகத்தான் மின்சார பேருந்து திட்டம். நடைமுறைக்கு ஒவ்வாத கவர்ச்சித்திட்டங்களை அறிவிப் பத்தை விட்டு அரசு போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார். முன்னதாக இந்த பேட்டியின் போது, சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் பா.காளியப்பன், மாவட்ட செயலாளர் வேளாங்கன்னிராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அக்.18 ல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
உதகை, அக்.9- நீலகிரி மாவட்ட விவ சாயிகள் குறைதீா் கூட்டம் உதகையில் வரும் அக்.18 ஆம் தேதியன்று நடைபெ றவுள்ளது. இதுதொடா்பாக நீல கிரி மாவட்ட தோட்டக் கலைத் துறை இணை இயக் குநா் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது, நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் உதகை யில் மாவட்ட ஆட்சியா் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் வரும் அக்.18 ஆம் தேதியன்று காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சி யா் அலுவலகக் கூட்டரங் கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்துக்குப் பிறகு இயற்கை வேளாண்மைக் குழுக் கூட்டம் அதே நாளில் பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் தலை மையில் நடைபெறும்.