tamilnadu

img

இந்திய கல்வியின் இருண்ட காலம்

கோவை, ஜூலை 26– ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சமூ கத்தைச் சேர்ந்த மாணவர்களை கல்விச் சாலையை விட்டு வெளியே றவும், வெளியேற்றவும் நடைபெறும் சூழ்ச்சியே மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கை என வாலிபர் சங்க கருத்தரங்கில் குற்றம்சாட்டப் பட்டுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் கோவை மாவட்டக்குழுவின் சார்பில் ”இந்திய கல்வியின் இருண்ட காலம்” என்கிற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் வியாழனன்று காந்தி புரம் கமலம் துரைசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கருத் தரங்கிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஸ்டாலின்குமார் தலைமை வகித்தார். அன்பரசு வரவேற்றார்.  மத்திய அரசின் புதிய கல்வி கொள் கையை வாலிபர் சங்கம் எதிர்க்க வேண்டிய அவசியம் குறித்து மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ் உரை யாற்றினார். இதனைத்தொடர்ந்து இந்திய மாணவர் சங்கத்தின் முன் னாள் மாநில செயலாளர் ஜி.செல்வா, கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப் பின் மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் பேரா.நா.மணி  ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

ஆர்எஸ்எஸ் மூளையில் உருவாக்கப்பட்டவை

அப்போது அவர்கள் பேசுகையில், இக்கல்விக்குழுவின் தலைவர் கஸ் தூரி ரங்கன் ஒரு கல்வியாளர் இல்லை. இதுவரை கல்வி குறித்த ஒரு அறிக் கையைக்கூட இவர் வெளியிட்ட தில்லை. இவர் ஒரு தொழிற்நுட்ப  வல் லுநர் அவ்வளவுதான். இவருக்கும் கல்வித்துறைக்கும் ஏந்தொரு சம்பந்த மும் இல்லை. இந்த கல்விக்கொள்கை ஆர்எஸ்எஸ் மூளையில் உருவாக்கப் பட்டவை. ஆர்எஸ்எஸ் அமைப்பின் இரண்டாவது தளமாக பெங்களூர் செயல்படுகிறது. ஆகவே இங்கு 60 சதவிகித கருத்துக்கள் கேட்கப்பட் டுள்ளது. அனைத்து ஆலோசனை கூட்டமும் பெங்களூரில் மட்டுமே நடைபெற்றதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  அதேநேரம், தமிழகத்தில் மூன்றே மூன்று பேரிடம் மட்டுமே கருத்து கேட்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநி லங்கள், உணவு, மொழி, நிலம், கலாச் சாரங்கள் கொண்ட நாட்டில் பரந்து பட்ட கருத்துக்களை கேட்காமல் தனக்கு வேண்டியவர்களிடம் மட்டுமே கருத்துக்கள் கேட்கப்பட்டுள் ளது. இதனால்தான் இதனை அறி வியல் பூர்வமற்றவை என்று ஆணித் தரமாக சொல்கிறோம். இந்திய நாட்டின் அடிப்படை அரசியல் சாசன மான மதச்சார்பற்ற தன்மை, சோச லிசம், சமூக நீதி குறித்து இக்கல்விக் கொள்கை ஒரு வார்த்தைகூட பேச வில்லை. 

இடஒதுக்கீட்டை ஏளனம் செய்யும் அறிக்கை

இதுமட்டுமல்லாமல் இடஒதுக்கீட் டின் மூலம் பயனடைந்தவர்களை ஏளனம் செய்கிறது இந்த அறிக்கை. குறிப்பாக, இக்கல்வி கொள்கையின் ஆங்கில பதிப்பில் 148 ஆம் பக்கத்தில் எஸ்சி, ஓபிசி என்கிற தலைப்பிட்ட பகுதியில் சொல்லப்பட்டுள்ளவை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், இடஒதுக்கீடு முறையால் தகுதியற்றவர்கள் எல்லாம் பிஎச்டி, எம்பில் படித்து ஆசிரியர், பேராசி ரியர் ஆகிவிட்டனர். இவர்கள் இன் னும் தங்களின் திறமையை உயர்த் திக் கொள்ளவில்லை. அதேநிலையில் தான் உள்ளனர். ஆகவே இவர்க ளுக்கு தனிபயிற்சி அளித்து மேம் படுத்த வேண்டும் என (சமூகநீதியை) இடஓதுக்கீடு மூலம் வாய்ப்பை பெற்ற வர்களை இழிவுபடுத்தும் அறிக் கையை முன்வைத்திருக்கிறார் கஸ்தூரிரங்கன். இதற்காகவே கஸ்தூரி ரங்கன் மீது வன்கொடுமை சட்டத்தின் மூலம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கலாம். இதற்கான குரலை உயர்த்த வேண்டிய அவசியம் உள்ளது.  மேலும், இக்கல்விக்கொள்கை புதிதல்ல, வாஜ்பாய் ஆட்சியின்போது ஏ பார் ஆப்பிள் என்பதை அனுமன் என்று மாற்றினார்கள். தற்போது, இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள மோடி பழைய கல்வி முறை மோசம். எனவே, புதிய கல்வி முறையை கொண்டு வருகிறோம் என்று இல்லாத ஒன்றை கற்பிதம் செய்கிறார்கள். ஆனால், உண்மை யில் இந்திய நாட்டை அடிமைப் படுத்தி வைத்திருந்த பிரிட்டிசார் தனக்கு சேவகம் செய்ய அடிமைகளை உருவாக்க தேர்வு முறையைக் கொண்டு வந்தனர். அதனையே, இப் போது மூன்றாம் வகுப்பில் இருந்தே தேர்வு முறையைக் கொண்டு வருகிறார்கள். அடுத்தடுத்த தேர்வுக ளால் இடைநிற்றல் அதிகரிக்கும். ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சமூகங் கள் கல்விச் சாலையை விட்டு வெளி யேறவும், வெளியேற்றவும் நடை பெறும் சூழ்ச்சியே இப்புதிய தேசிய கல்வி கொள்கை. 

மோடி அரசின் சூழ்ச்சி

மேலும், கல்வி கொள்கைகள் குறித்து கருத்துக்கேட்பதெல்லாம் வெறும் கண்துடைப்பே. நம்மை யெல்லாம் கருத்துகளை பதிவிடச் சொல்லிக் கொண்டே மறுபுறம் நாடா ளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இக்கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த தேவையான நிதிகளை ஒதுக்கப் பட்டிருப்பதில் இருந்து மோடி அரசின் சூழ்ச்சிகளை உணர்ந்துகொள்ள முடியும். ஆகவே வலுவான எதிர்ப்பை உருவாக்க வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம். இக்கல்வி கொள் கையின் ஆபத்தை எளிய மக்களி டத்தில் அவர்கள் புரியும் மொழியில் கொண்டு சென்று எதிர்ப்பை அதி கரிக்க செய்ய வேண்டும். வலுவான திரட்டலால் தான் நம்முடைய மாணவர்களின் கல்வி உரிமையை  பாதுகாக்க முடியும். அத்தகைய உண்ணத பணியை வாலிபர் சங்கம் மேற்கொள்ள வேண்டும் என்பதை வெளிப்படுத்தினர். முன்னதாக, இக்கருத்தரங்கில் வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் வி.சந்திரசேகரன், மாநிலக்குழு உறுப் பினர் எஸ்.பாரதி மற்றும் நிர்வாகிகள் எஸ்.துரைசங்கர், அர்ஜூன், கிருபா ஸ்ருதி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முடிவில் நிசார் நன்றி கூறினார்.