tamilnadu

img

சட்டப்படியான ஊதியம் வழங்கிடுக

ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறையினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், நவ.25- சட்டப்படியான குறைந்தபட்ச  ஊதியம் வழங்கக்கோரி ஊரக  வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஒஎச்டி ஆபரேட் டர் மற்றும் துப்புரவு பணியாளர் களுக்கு அரசாணை (எண்.2 டி) படி குறைந்தபட்ச ஊதியம், நிலுவை தொகையை வழங்க வேண்டும். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி சம்பள நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். டேங்க் தூய்மை பணி யில் ஈடுபடுபவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். மூன்று ஆண்டுகள் பணியாற்றிய துப்புரவு தொழிலாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ண யம் செய்து வழங்க வேண்டும்.  1.10.2017 முதல் பணி ஓய்வுபெற்ற துப்புரவு தொழிலாளர்களுக்கு அரசாணை (எண்.303) படி மாதம் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் வழங்க வேண்டும். 

துப்புரவு தொழிலாளர்க ளுக்கு முகவுறை, தலைக்கவசம், கையுறை  உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங் கத்தினர் நாமக்கல் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.கண்ணன் தலைமை வகித்தார்.  சிஐடியு மாநில துணைத்தலைவர் ஆர்.சிங்காரவேலு, மாவட்டச் செயலாளர் ந.வேலுசாமி, மாவட்ட துணை செயலாளர் கு.சிவராஜ் ஆகியோர் கோரிக் கைகளை விளக்கி பேசினர். நிறை வாக சங்க துணைச் செயலாளர் ஏ.முருகேசன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் திரளான ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோடு

துப்புரவு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியச் சட்ட அரசாணைப்படி ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட் சித்துறை ஊழியர் சங்கத்தினர் திங்களன்று ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதாவி டம் கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுவினை சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.சுப்பிர மணியன், செயலாளர் மாணிக் கம், பாண்டியன் உள்ளிட்டோர் அளித்தனர். மேலும், இம்மனுவில்,ஈரோடு மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு ரூ.490 தினக்கூலியாக அளிப் பதை உறுதிப்படுத்த வேண்டும். ஈரோடு மாநகராட்சி, சென்னி மலை, பெருந்துறை, கருமாண்டி செல்லிபாளையம், கெம்பநாயக் கன்பாளையம், அரிப்பம்பாளை யம் உள்ளிட்ட சில பேரூராட்சிக ளில் செப்டம்பர் மற்றும் அக்டோ பர் மாதத்திற்கான ஊதியம்  மாவட்ட ஆட்சியரின் செயல் முறை ஆணையின்படி தொழி லாளர்களுக்கு வழங்கப்பட்டுள் ளது. இதைப்போல் மற்ற பகுதி களிலும் உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண் டும் என்றும் வலியுறுத்தப்பட்டி ருந்தது.