கோவை, செப்.28– கோவை சாயிபாபா காலணி பகுதியில் உள்ள தொழி லதிபர் வீட்டில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள் ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. கோவை மாவட்டம், ராஜா அண்ணாமலைபுரம் பாரதி பார்க் அருகே சாய்பாபா காலணி பகுதியில் வசிப்பவர் நாராயணசாமி. இவர் தடாகம் சாலையில் ஸ்ரீரங்கநாதன் இண்டஸ்ட்ரீஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரின் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளை யர்கள் ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.25 லட்சம் மதிப் பிலான தங்க, வைர நகைகள் கொள்ளையடித்துச் சென் றுள்ளனர். இதனையடுத்து சாயிபாபா காலனி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.