tamilnadu

img

பாத்திர சங்க கட்டிடத்தை புதுப்பித்துக் கட்ட முடிவு ஆலோசனை கூட்டத்தில் ரூ.8.50 லட்சம் நிதி வழங்கல்

திருப்பூர், ஜூலை 18 - திருப்பூர் அனுப்பர்பாளை யத்தில் உள்ள சிஐடியு பாத்திரத் தொழிலாளர் சங்கக் கட்டிடத்தை புதுப்பித்து மேம்படுத்திக் கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. இது  தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோ சனைக் கூட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்தோர் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம்  நிதியை ஒப்படைத்தனர். பலர் கட்டு மானப் பொருட்கள் மற்றும் பல் வேறு உதவிகளைச் செய்வதாக உறுதியளித்தனர். சிஐடியு பாத்திரத் தொழிலாளர் சங்க கட்டிடம் அவிநாசி சாலை  அனுப்பர்பாளையம் பேருந்து  நிறுத்தம் பின்புறம் அமைந்துள்ளது.  இக்கட்டிடத்தை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக ஆலோ சனைக் கூட்டம் புதனன்று பாத்திரத் தொழிலாளர் சங்கத் தலைவர் ஏ. ஆறுமுகம் தலைமையில் நடை பெற்றது. இதில் சிஐடியு மாவட்டச்  செயலாளர் கே.ரங்கராஜ், மார்க் சிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரச் செயலாளர் வி.பி.சுப்பிர மணியம், பாத்திர சங்கச் செயலாளர் கே.குப்புசாமி, முன்னாள் செய லாளர் ஏ.கணேசன் ஆகியோர் கட்டி டத்தைப் புதுப்பித்து கட்டுவது தொடர்பாக ஆலோசனைகளைத் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் பாத்திர சங்கத் தின் முன்னாள் நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள், செங்கொடி இயக்க ஆதரவாளர்கள் பங்கேற்றனர். இதில் சங்க முன்னாள் நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள் குழு சார்பில் இக்கட்டிடத்தைப் புதுப்பித்துக் கட்டுவதற்காக ரூ.8 லட்சத்து 50 ஆயிரத்தை சிஐடியு மாவட்டச் செய லாளர் கே.ரங்கராஜிடம் ஒப்படைத் தனர்.  அத்துடன் அடித்தளம் அமைப் பதற்கான கருங்கற்கள், எம் சாண்ட்  மணல், கிரானைட், டைல்ஸ் போன்ற கட்டுமானப் பொருட் களை தருவதாக கூட்டத்தில் பங் கேற்ற பலர் ஒப்புக் கொண்டனர். நிதியாகவும் வழங்குவதாக பலர் உறுதியளித்தனர். கட்டிடம் புதுப்பிப்பது தொடர் பான முதல் கட்ட ஆலோசனைக் கூட்டத்திலேயே ஆர்வத்துடன் பலரும் உதவ முன்வந்தது உற்சா கத்தை ஏற்படுத்தியது. அத்துடன்  இக்கட்டிடப் பணியை செய்து முடிப் பதற்காக குழு ஒன்றும் உருவாக் கப்பட்டது. இக்கூட்டத்தில் அனுப் பர்பாளையம், வேலம்பாளையம் நகரப் பகுதியில் இடதுசாரி இயக் கத்தின் வளர்ச்சிக்கு ஆதாரமாக பாத்திர சங்கம் உருவாகி வளர்ந்த தையும், இப்பகுதியில் இடதுசாரி இயக்கத்தின் அரசியல் வளர்ச் சிக்கும், மக்கள் பணிக்கும் புதிய கட்டிடம் கட்ட வேண்டியதை இன் றைய அரசியல் சூழலுடன் சிஐடியு  மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் எடுத்துக் கூறினார். இக்கூட்டத்தில் பெண்கள் உள் பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிறைவாக பாத்திர சங்கப் பொருளாளர் குபேந்திரன் நன்றி கூறினார்.