tamilnadu

திருப்பூரில் ரூ.944.64 கோடியில் சீர்மிகு நகரப் பணிகள்: ‘குறித்த காலத்தில்’ நிறைவேற்றப் போவதாக தகவல்

திருப்பூர், ஜூன் 26 – திருப்பூர் மாநகராட்சியில் ரூ.944 கோடியே 64 லட்சம் மதிப் பீட்டில் சீர்மிகு நகரத் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையர் க.சிவக் குமார் தெரிவித்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு செப் டம்பர் 20ஆம் தேதி மத்திய அரசின் சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டது. இதில் நகர்  முழுமைக்குமான சீரமைப்புத் திட்டம், பகுதி அடிப்படையிலான மேம்பாட்டுத் திட்டம் என இரு  வகைகளில் பணிகள் மேற் கொள்ளப்படுகின்றன. இதற்காக என்னென்ன பணிகளை மேற் கொள்வது என்று ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.  இதில் மாநகராட்சியின் விரி வடைந்த பகுதிகளுக்கு குடிநீர் அபி விருத்திப் பணிகள் மேற்கொள்ள சீர்மிகு நகரத் திட்டத்தில் இருந்து ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டது. அத்துடன் ரூ.3.86 கோடி மதிப் பீட்டில் நகரில் நான்கு இடங்களில் பூங்காக்கள் அமைக்கும் பணி நடை பெறுகிறது. ரூ.30 கோடி மதிப் பீட்டில் ஒருங்கிணைந்த கட்டுப் பாட்டு அறை, பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிக்கு ரூ.60.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நான்காவது குடிநீர் திட்டம்
அம்ரூத் திட்டத்தின் கீழ் திருப் பூருக்கு நான்காவது குடிநீர் திட்டம்  ரூ.1063 கோடியே 51 லட்சம் மதிப் பீட்டில் நிறைவேற்ற ஒப்புதல் பெறப்பட்டது. இதில் சீர்மிகு நகரத்  திட்டத்தில் இருந்து பங்குத் தொகை யாக ரூ.106.35 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த பணிகள் தற் போது நடைபெற்று வருகின்றன. திருப்பூர் டவுன்ஹால் மைதா னத்தில் மாநாட்டு அரங்கம் அமைக்கும் பணி ரூ.52 கோடி யிலும், பழைய பேருந்து நிலை யத்தை அகற்றி புதிதாக பேருந்து நிலையம் அமைக்க ரூ.36.50 கோடியும், அதன் அருகில் ரூ.18.10 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி வாகனம் நிறுத்துமிடமும் அமைக் கப்படுகிறது. சூரிய ஒளி மூலம் மின்சக்தி உற்பத்தி செய்ய ரூ.2.34 கோடியும், எல்ஈடி தெருவிளக்குகள் புதிதாகப் பொருத்த ரூ.16.92 கோடியும், 13 இடங்களில் நுண் உரங்கள் செயலாக்க மையங்கள் அமைக்கவும், திடக்கழிவு வாக னங்கள் வாங்குவதற்கும் ரூ.22.19 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மீன் மார்க்கெட் புதி தாகக்கட்ட ரூ.2.17 கோடியும், தினசரி அங்காடி நவீனமயமாக்க ரூ.28.99 கோடியும், வாரச்சந்தை புதிதாக அமைக்க ரூ.12.86 கோடி யும், பூ மார்க்கெட் புதிதாக அமைக்க  ரூ.4.47 கோடியும், இடுவாயில் 4.80 மெகாவாட் திறன் சூரியஒளி மின் தகடுகள் அமைக்க ரூ.27.16 கோடியும் ஒதுக்கப்பட்டு பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் நொய்யல் ஆற்றுப் படுகை மேம்பாடு செய்ய ரூ.156.76  கோடி மதிப்பீட்டில் ஆறு துணைப்  பிரிவுகளாக வேலை தீர்மானிக் கப்பட்டுள்ளது. இதில் 3 பணி களுக்கு ஒப்பந்த புள்ளிகள் பெறப் பட்டு ஆய்வு செய்யப்பட்டு வரு கிறது. 2 பணிகளுக்கு மறு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஒரு பணிக்கு தொழில்நுட்ப அனுமதி கோரி நகராட்சி நிர்வாக ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது. வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்க ரூ.28.75 கோடி, 2 மெகா வாட் திறன் சூரிய ஒளி மின்தகடுகள் அமைக்க ரூ.11.85 கோடி மதிப் பீட்டில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப் பட்டுள்ளன. பிரதான வடிகால் அமைக்கும் பணிக்கு ரூ.39.74 கோடி மதிப்பீட்டில் தொழில்நுட்ப அனுமதி கோரப்பட்டுள்ளது. மிடுக் கான சாலைகள் அமைத்தல் பணிக்கு ரூ.150 கோடிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு சீர்மிகு நகரத் திட்ட நிர்வாகக்குழு கூட்டத்தின் அனுமதிக்கு சமர்ப் பிக்கப்பட்டுள்ளது. ரூ.16.33 கோடி மதிப்பீட்டில் சாலைக் குறியீடுகள் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து மாநில அளவிலான உயர் மட்டக்குழுவின் நிர்வாக ஒப்புத லுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த  அனைத்துப் பணிகளையும் குறிப் பிட்ட கால அளவிற்குள் செய்து முடித்திட மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருவதாக ஆணையர் க.சிவக்குமார் தெரிவித் துள்ளார்.

கிணற்றில் போட்டக் கல்

சீர்மிகு நகரமாக திருப்பூர் அறி விக்கப்பட்டபோதே அடுத்த இரண் டாண்டு காலத்தில் இத்திட்டப் பணிகள் நிறைவேற்றி முடிக்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் அதன் பிறகு கிணற்றில்  போடப்பட்ட கல்லாக இத்திட்டம்  கிடந்தது. இத்திட்டப் பணிகள் பற்றிய எந்த விபரமும் வெளிப் படையாக தெரிவிக்கப்பட வில்லை. கடந்த 2018ஆம் ஆண்டு மாநகராட்சி நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட சமயம் அப் போதைய ஆணையர் எம்.அசோகன் இத்திட்ட பணிகள் குறித்துத் தெரிவித்ததுடன் விரை வில் பணிகள் நிறைவேற்றி முடிக்கப்படும் என்றார். எனினும் அதன் பிறகும் இதன் விபரம் மூடு மந்திரமாகவே இருந்தது.

தேர்தலுக்கு காட்டிய அவசரம்

இந்நிலையில் கடந்த நாடாளு மன்றத் தேர்தல் தேதி அறிவிப் பதற்கு சில நாட்களுக்கு முன்பாக பிப்ரவரி 28ஆம் தேதிதான் திடீ ரென சீர்மிகு நகரத்திட்டப் பணி களுக்கு முதல்வர் பழனிச்சாமி  அடிக்கல் நாட்டினார். ஆக திட்டம்  அறிவித்து இரண்டரை ஆண்டு களுக்குப் பிறகுதான் திட்டப்  பணிகள் தொடங்கி வைக்கப் பட்டன.  இத்துடன் ஏற்கெனவே அம்ரூத் திட்டத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் குடிநீர், பாதாளச் சாக்கடை திட்டப் பணியும், சீர்மிகு நகரத் திட்டத்தின் நிதிப்பங்கீட்டுடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது. எனவே அதையும் முழுமையான சீர் மிகு நகரத் திட்டப்பணி என்று சொல்ல முடியாது. இந்த பணியைத்  தவிர்த்து விட்டுப் பார்த்தால் அநேக மாக சீர்மிகு நகரத்திற்கான பணிகள் ஏதும் தொடங்கப்படவில்லை என்றே தெரிகிறது. இந்நிலையில்தான் சீர்மிகு நகரத் திட்டப் பணிகள் பற்றிய முழுமை விபரத்தையும், தற் போதைய நிலவரத்தையும் ஆணையர் சிவக்குமார் தெரிவித் துள்ளார். இரண்டே முக்கால் ஆண்டு கடந்த பிறகுதான் முழு விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காலத்தில் நிறைவேற்றப் போவதாக கூறுகின்றனர். அந்த “குறித்த காலம்” என்ன என்பது மாநகராட்சிக்கே வெளிச்சம்! (ந.நி)