tamilnadu

பென்னாகரம் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

தருமபுரி, ஏப்.2-பென்னாகரம் அருகே வாகன சோதனையில் ரூ.1 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள நல்லூரில் தேர்தல் அதிகாரி மனோகரன் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கேரளாவில் இருந்து கார் ஒன்று வந்தது. அந்த காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது காரில் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். காரை ஓட்டி வந்தவர் கேரளாவை சேர்ந்த மகபூப் ஆஷா என்பதும், உரிய ஆவணங்கள் ஏதுமின்றி ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை கொண்டு வந்ததும் தெரியவந்தது.உடனே அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து பென்னாகரம் கருவூலத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் காண்பித்து பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என்று அதிகாரிகள் மகபூப் ஆஷாவிடம் தெரிவித்தனர்.

;