tamilnadu

img

உயிருக்கு ஆபத்து: பாதுகாப்பு கேட்டு பெண் மனு

கோவை, மே 28–தனது கணவரின் உறவினர்களால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக குழந்தையுடன் பெண் ஒருவா் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் வாரந்திர குறைதீர் கூட்டம்நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டதால் திங்களன்று வழக்கம் போல் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் கோவைபுதூர் பகுதியைச் சேர்ந்த சுஜாதா என்றபெண் ஒருவர், தனது 4 வயது குழந்தையுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அவர், தனது கணவரின் பெயரில் உள்ள சொத்துகளை அபகரிக்கும் நோக்கில், தங்களது உறவினர்கள் கூலிப்படை ஆட்கள் மூலம் மிரட்டுவதாகவும், இதனால் தனக்கும், தன்குழந்தையின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகக் கூறி தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிகோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இதில் தனது கணவரின் உறவினர்கள், அடியாட்களைக் கொண்டு நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் அவர்கள் பின் தொடர்கின்றனர். எனக்கும், எனது குழந்தையின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதால், எங்களுக்குப் பாதுகாப்புவழங்கி உறவினர்களால் ஏமாற்றப்பட்ட சொத்துகளை கிடைக்கப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கூறினார். என வலியுறுத்து தன் நான்கு வயது குழந்தையுடன் வந்து மனு அளித்தார்.

 மோசடி புகார்

கவுண்டம்பாளையம் பகுதியில் விஜிம்என்ற தனியார் டிராவல்ஸ் நடத்தி வருபவர் வெங்கடேஷ். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு நாளிதழ்கள் மூலம் ஒப்பந்த வாகனம்தேவை என்ற விளம்பரம் செய்து உள்ளார். இதனை நம்பி கோவை, ஈரோடு, பொள்ளாச்சி, சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 38 வாகனங்களை ஒப்பந்த அடிப்படையில் கொடுத்து உள்ளனர். இந்நிலையில் முதல் ஏழு மாதங்கள்ஒப்பந்த வாகனங்கள் கொடுத்தோருக்கு முறையாகப் பணம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து பணம் கொடுக்காமல் காலம்தாழ்த்தி வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்தவர்கள் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போது, விரைவில் பணத்தைத் திருப்பி தருவதாகவும், ஒப்பந்த வாகனங்களை விற்க விரும்புவோரிடம் முழு பணமும் கொடுத்து தானே வாங்கிக்கொள்வதாக வெங்கடேஷ் உறுதி அளித்துள்ளார். இதன் பின்னரும், பணம் கிடைக்கப் பெறாததால் மாவட்ட கண்காணிப்பாளரிடம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் புகார் அளித்தனர். அதன்பேரில், வெங்கடேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது, வெங்கடேஷ் தலைமறைவாக உள்ளதால் அவரை கைது செய்து, தங்களது பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் திங்களன்று மனு அளித்தனர்.