tamilnadu

பேருந்து வசதி கோரி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்

திருப்பூர், ஆக. 16 - பழைய கோட்டை புதூர் கிராமசபை கூட்டத்தில் பேருந்து வசதி  கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கயம் ஒன்றியம் பழைய கோட்டை கிராம சபைக் கூட்டம் பழைய கோட்டைப் புதூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் அமைவிடத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் வெங்கரையாம்பாளையம் உள்ளது. இவ்வூரில் இருந்து 40 குழந்தைகள் பழையகோட்டைப் புதூர் நடுநிலைப் பள் ளிக்கு அன்றாடம் 3 கி.மீ தூரம்  நடந்தே வருகின்றனர். இத னால் பள்ளிக் குழந்தைகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அடிக்கடி விடுமுறையும் எடுக்கின்றனர். எனவே வெங்கரை யாம்பாளையத்தில் இருந்து பள்ளிக்கு வரும் குழந்தை களுக்கு அரசுப் பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் சார்பில் கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.