அரசு ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம்
நாமக்கல், செப்.13- அரசு துறைகளில் பணி புரியும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை களைய விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என நாமக்கல்லில் நடைபெற்ற அரசு ஊழியர் சங்க மாநாட் டில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. நாமக்கல்லில் தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு நடைபெற் றது. இம்மாநாட்டில் மாநில துணைத் தலைவர் தமிழ்ச் செல்வி, மாவட்டத் தலை வர் கு.ராஜேந்திரபிரசாத் ஆகியோர் சிறப்புரையாற் றினார். மாவட்ட செயலா ளர் ஆர்.முருகேசன், பொரு ளாளர் குப்புசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக் கிப் பேசினர். இதைத்தொடர்ந்து மாநாட்டில் சங்கத் தின் மாவட்ட தலைவராக இஜோந்திர பிரசாத், செயலாளராக இரா.முருகேசன், பொருளாளராக நா.அமுதாவள்ளி, துணைத் தலைவர்களாக வி.இளவேந்தன், நந்தினி, தங்கராஜ், பெ.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக, இம்மாநாட்டில் கடந்த ஜனவரி மாதம் ஜாக்டோ-ஜியோ சார்பில் நடைபெற்ற வேலை நிறுத் தத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர் மீது தமிழக அரசால் போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். அனைத்து அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் பிரச்சனைகளை களைந்திடும் வகையில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் அனைத்து நோய் களுக்கும் சிகிச்சை அளிக்குமாறு மருத்துவ காப்பீட்டில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில் மாவட்ட மகளிர் துணைக் குழு உறுப்பினர் நந்தினி உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்டத் துணைத் தலைவர் இளவேந்தன் நன்றி கூறினார்.