tamilnadu

img

உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தாயை கைது செய்ய முயன்ற காவல்துறையினர் காலைப்பிடித்து கதறியழுத சிறுமி

கோவை, ஜூன் 26–  விளைநிலத்தில் உயர் மின் கோபுரம் அமைக்க அளவீடு செய்ய வந்த அதிகாரி களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்ய முயலுகையில், தனது தாயை விடு விக்கக்கோரி சிறுமி ஒருவர் அதிகாரிகளின் காலைப்பிடித்து அழுத சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விவசாயிக ளின் கடும் எதிர்ப்பையும் மீறி விளை நிலங் களில் உயர் மின் கோபுரம் அமைக்க நிலம் அளவீடு செய்யும் பணிகளை அதிகாரி கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற் கெதிராக ஆங்காங்கே விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின் றார்கள். இந்நிலையில் கோவை மாவட்டம், போகம்பட்டி பகுதியில் புதனன்று உயர் மின் கோபுரம் அமைக்க நிலம் அளவீடு செய்யும் பணிக்கு அதிகாரிகள் வந்தனர்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு காவல்துறையினர் பெருமளவு குவிக்கப்பட்டனர். இதன்பின் போராட் டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் எங்கள் நிலத்தைவிட்டு அதிகாரி கள் வெளியேற வேண்டும் என்கிற கருத்தில் விவசாயிகள் உறுதியோடு நின் றனர். இதனையடுத்து மார்க்சிஸ்ட் கட்சி யின் முன்னணி ஊழியர் கண்னுசாமி உள்ளிட்ட மூவரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.  இதனிடையே போராட்டத்தில் ஈடு பட்ட பெண்களை கைது செய்ய காவல் துறையினர் முயன்றபோது அங்கிருந்த  பெண் ஒருவர் ஏற்கனவே அமைக்கப்பட்டி ருந்த உயர் மின் கோபுரம் ஒன்றின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரை கீழே இறக்கி கைது செய்ய காவல்துறையினர் ஈடுபட்டனர். அப் போது, தனது தாயை கைது செய்ய வேண் டாம் என்று கூறி சிறுமி கண்ணீர் மல்க பெண் காவலர்களிடம் இரு கைகளை கூப்பியும் காலைப்பிடித்தும் வேண்டுகோள் விடுத்தார். மேலும் தங்களது நிலங்களை அளவீடு செய்ய வேண்டாம் வெளியே செல்லுங்கள், வெளியே செல்லுங்கள் என்று சிறுமி கண்ணீர் மல்க அதிகாரி களை கேட்டுக் கொண்டார். இச்சம்பவம் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்களிடையே மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.