நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனியன்று தமிழக ஆளுநர் மாவட்டத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். நிர்மலா, ஆளுநர் துணை செயலாளர் டி. செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.