விழுப்புரம், ஜூன்16- விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனி சாமி தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் தயார் செய்தல், வாக்குச்சாவடி பட்டியல் இறுதி செய்தல், உள்ளாட்சித் தேர்தலுக்கு தேவையான சட்ட முறையிலான படி வங்கள், தேர்தல் பொருட்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சி அலுவலகம், விழுப்புரம் நகராட்சி அலுவலகம், கோலியனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள படிவங்களை நேரில் பார்வை யிட்டு, ஒவ்வொரு படிவத்தி ற்கும் அதன் விவரம் குறித்த ‘சிலிப்’ வைக்கப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டார். மேலும் விழுப்புரம் நகராட்சி அலுவலகம் மற்றும் கோலியனூர் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் பணிபுரியும் கணினி இயக்குபவர்களிடம் தேர்தல் குறித்த விவரங்களை பயிற்சியில் தெரிவித்தவாறு கணினியில் பதிவு செய்யப்படும் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். கோலியனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வாக்குப் பெட்டிகளை மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜா, ஊராட்சிகளின் உதவி இயக்குனர்கள் ஜோதி, ரத்தினமாலா, நகராட்சி ஆணையர்கள் லட்சுமி, சையது முஸ்தபா, ஸ்ரீபிரகாஷ், கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவ லர் ஜெகதீசன் மற்றும் பேரூ ராட்சி செயல் அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.