tamilnadu

img

செங்கிப்பட்டியில் சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை

தஞ்சாவூர்: தஞ்சை பூதலூர் தெற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றியக்குழு கூட்டம்  ஞாயிற்றுக்கிழமை செங்கிப்பட்டியில் நடைபெற்றது. வாலிபர் சங்க ஒன்றியக்குழு உறுப்பினர் ஏ.முருகன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ஏ.கரிகாலன் முன்னிலை வகித்தார். ஒன்றியத் தலைவர் தேவா வரவேற்றார். ஒன்றிய துணைச் செயலாளர் த.தமிழ்ச்செல்வன், சிபிஎம் ஒன்றியக்குழு சோலை ரமேஷ் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, மணிகண்டன், ஏ.புஷ்பராஜ், கே.விஜயகுமார், முருகானந்தம், ராஜகுரு, சுர்ஜித் கலந்து கொண்டனர். கூட்டத்தில், செங்கிப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும். சானூரப்பட்டி கடை வீதியில், வியாபாரிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் வசதி செய்து தர வேண்டும். புதுக்குடி அரசு உயர் நிலைப்பள்ளியில் சுகாதாரமற்ற முறையில் உள்ள கழிவறைகளை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், வரும் மார்ச் 24 ஆம் தேதி பகத்சிங் நினைவு தினத்தன்று, செங்கிப்பட்டியில் வாலிபர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.