tamilnadu

எச்.தொட்டம்பட்டி சுகாதார வளாகத்தை சீரமைக்க கோரிக்கை

தருமபுரி, ஏப். 24-அரூர் ஊராட்சி ஒன்றியம், எச்.தொட்டம்பட்டியில் சுகாதார வளாகத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம், எச்.தொட்டம்பட்டியில் 600க்கும்மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த சுகாதார வளாகம் பயன்பாடின்றி பூட்டியே உள்ளது. இந்நிலையில், மகளிர், சிறுவர்கள் சாலையோரங்களிலும், திறந்த வெளியிலும் மலம்கழிக்கும் அவலநிலையுள்ளது. இதனால் சுகாதார கேடுகளும், நோய் தொற்றும் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். எனவே, பூட்டி வைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;