tamilnadu

img

விவசாய நிலத்தில் எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தை கைவிட கோரிக்கை

திருப்பூர், செப். 9 - ஐ.டி.பி.எல். திட்டம் என்றழைகு கப்படும் விவசாய நிலங்களில் எண் ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தை  த்து செய்வதுடன், சாலையோரங் களில் மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும் என  இத்திட்டத்தால் பாதிக் கப்படும் விவசாயிகள் ஈரோடு, திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். பாரத் பெட்ரோலிய நிறுவனத் திட்டத்தில் இருகூரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே தேவனகொத்தி வரை கோவை, திருப் பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தரும புரி, கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட் டங்களின் விளை நிலங்களின் வழி யாக புதியதாக எண்ணெய் குழாய் பதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே அமைந்துள்ள கொச்சின் - கரூர்  ”பெட்ரோ நெட்” எண்ணெய் குழாய் திட்டத்தை ஒட்டி திருப்பூர் மாவட்டம் அலகுமலை வரை எடுத்து வந்து, பின்பு தனியாகப் பிரித்து மேற்படி மாவட்டங்களின் வழியாக விவசாய நிலத்தினுள் அமைக்கவும்  மத்திய அரசு அறிவிப்பு செய்து, அதற்கான முன்னேற்பாடுகளை மாநில அரசு செய்து வருகிறது.  இதற்காக கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி மத்திய அரசிதழில் அரசாணை வெளியிடப்பட்டு, பெட்ரோலியம் மற் றும் தாதுப் பொருட்கள் குழாய் அமைப் புச் சட்டம் 1962இன் படி அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள் ளிட்ட மாவட்டங்களில் விவசாயி களுக்கும் வருவாய்த் துறை நேரடியாக அறிக்கை வழங்கி உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இத்திட்டத்திற்கு நிலத்தை உபயோ கப்படுத்தும் உரிமையை எடுத்து கொள்ளப் போவதாக மேற்படி அறி விக்கை தெரிவிக்கின்றது. இந்த கிரா மங்களில் உள்ள விவசாயிகள்  தென்னை, மா, கொய்யா, எலுமிச்சை, நெல், கரும்பு, மஞ்சள், தக்காளி, கத் தரி, வெங்காயம், அவரை உள்ளிட்ட பயிர்கள் செய்து வருகின்றனர். வேம்பு, புங்கன், வாவை, வெள்ளைவேலான் உள்ளிட்ட மரங்களும் வளர்ந்து நிற் கின்றது. நூற்றுக்கணக்கான விவ சாய குடும்பங்களும், விவசாய தொழி லாளர் குடும்பங்களும் இந்நிலத்தை நம்பி வாழ்வாதாரத்தை கொண்டுள் ளன.

இதில் குழாய் பதிப்பதற்கு பாரத் பெட்ரோலிய நிறுவனம் எழுபது அடி அகலத்திற்கு விவசாய நிலத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் எடுத்து கொள்ளும். சாகுபடி செய்துள்ள அனைத்து பயிர்களையும் அழித்து விடுவார்கள், குழாய் அமைத்த பின்பு தென்னை, மா போன்ற மரப்பயிர் கள் வளர்க்க கூடாது. குடியிருப்பு கள், மாட்டு சாலைகள், கோழிப்பண் ணைகள், ஆழ்குழாய் கிணறுகள் உள் ளிட்டு எவ்வித கட்டுமானப் பணி களையும் மேற்கொள்ளக் கூடாது, கனரக இயந்திரங்கள் பயன்படுத் தக்கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்படும்.  குழாய் அமைப்பில் பழுதோ,  விபத்தோ ஏற்பட்டால் நிலத்தின் உரிமையாளரே பொறுப்பாக்கப் படுவர்  என கடந்த 2012-ஆம் ஆண்டு சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் விவசாய நிலம் மதிக் பிழப்பு, வங்கிகளில் கடன் கொடுக் கமாட்டார்கள் என்ற சூழல் உட்பட நில உரிமையாளர்களுக்கு கடும் பாதிப்பு கள் இருப்பதால் விவசாயிகள் மத் தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.  ஏற்கனவே கட்டுபடியான விலை கிடைக்காமை, பாசன திட்டங்கள் முறையாக செயல்படுத்தாமை, உரம், பூச்சிமருந்து உள்ளிட்ட இடு பொருட்கள் விலையுயர்வு என நொடிந்துவரும் விவசாயிகளுக்கு இந்த பெட்ரோல் குழாய் பதிப்பு திட் டங்கள் பேரிடியாய் உள்ளது. அத்து டன் உயர்மின்கோபுர திட்டங்க ளாலும், சாலை விரிவாக்க திட்டங் களாலும் மேற்கு மாவட்ட விவசாய நிலங்கள் கடும் பாதிப்படைந்துள்ள நிலையில் இத்திட்டத்தால் விவ சாயிகள் மிகவும் வேதனையடைந் துள்ளனர்.

தமிழகத்தில் விவசாயிகளின் விளை நிலங்களில் செயல்படுத்து வதற்கு மாற்றாக, சாலையோரங் களிலோ, மாற்றுவழியிலோ கொண்டு சென்று விவசாய நிலங்களை தமி ழக அரசு பாதுகாக்க  வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செய லாளர் பெ.சண்முகம் தலைமையில் ஐடிபிஎல் திட்ட எதிர்ப்பு விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் உள் ளிட்டோர் திங்களன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  இந்நிகழ்வில் விவசாய சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூ தனன்,  மாவட்டச் செயலாளர் ஆர். குமார்,  துணை நிர்வாகிகள் உடுக்கம் பாளையம் பரமசிவம், குழந்தைசாமி, கா.வேலுச்சாமி, பல்லடம் வை. பழனிச்சாமி, செ.முத்துக்கண்ணன், ஐடிபிஎல் திட்ட எதிர்ப்பு விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஜெயப் பிரகாஷ், பாலசுப்பிரமணியம், இளை ஞர் பெருமன்ற மாவட்டத் தலைவர் தெய்வசிகாமணி உள்பட திரளா னோர் கலந்து கொண்டனர். கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி இது குறித்து தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் பெருந் துறை வட்டத்திற்குப்பட்ட எக்கட் டாம்பாளையம், பசுவபட்டி, குச்சி பாளையம், முருங்கத்தொழுவு உள் ளிட்ட பல வருவாய் கிராமங்க ளில் நூற்றுக்கணக்கான ஏக்கர்  நிலங்கள் இத்திட்டத்திற்கு 1962 பிஎன்பி சட்டப்படி நிலத்தை உபயோ கப்படுத்தும் உரிமையை எடுத்துக் கொள்ளப் போவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.  ஆகவே தமிழக விவசாயிகளின் உரிமையை காக்கும் வகையில் விவ சாயிகளின் விளை நிலங்களில் செயல் படுத்துவதற்கு மாறாக சாலையோரங் களில் அல்லது மாற்று வழியில் கொண்டு சென்று விவசாய நிலங் களை பாதுகாக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் திங்களன்று மனு அளித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனு சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாநில நிர்வாகி சாமி நடராஜன், தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பொன்னையன், ஒருங் கிணைப்பாளர்கள் பாலசுப்பிர மணியம், வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.