tamilnadu

img

மேட்டுப்பாளையம் அருகே இரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ராஜ நாகம்

மே.பாளையம், ஜுன் 26-  மேட்டுப்பாளையம் அருகே இரை தேடி குடியிருப்பு பகுதிக் குள் நுழைந்த அரிய வகை ராஜ நாக பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாய் பிடித்து அடர்ந்த காட்டுக்குள் கொண்டு சென்று விட்டனர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தை அடுத்துள்ள கல்லார் பகுதியில் புளியமரத் தோப்பு குடியிருப்பு அருகே சில நாட்களாக பெரிய ராஜநாக மொன்று சுற்றித்திரிவதை இப்பகுதி மக்கள் கண்டனர். ஏற்கனவே கடந்த நான்கு மாதங்க ளுக்கு முன்பு இதே இடத்தில் பத்தடி நீளம் கொண்ட ராஜ நாகம் பிடிபட்டிருந்த நிலையில் மீண்டும் மற்றொரு ராஜநாகம் கண்களில் தட்டுப்பட்டதால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மேட்டுப்பாளையம் வனத்துறை யினர் பாம்பு பிடிக்கும் வல்லுனர் குழுவின் உதவியோடு ராஜ நாகத்தை தேடிவந்தனர். பல முறை குறிப்பிட்ட ராஜநாகத்தை பிடிக்க முயன்றும் பாம்பு தப்பி சென்றபடி இருந்தது. 

இந்நிலையில் புதனன்று புளியமரத்தோப்பு அருகே புத ருக்குள் மறைந்திருந்த ராஜநாகம் மலைப்பாம்பு ஒன்றை பிடித்து விழுங்கி கொண்டிருப்பதை கண்ட அப்பகுதிமக்கள் இது குறித்து உடனடியாக மேட்டுப்பாளையம் வனத்துறைக்கு தகவல் தெரிவித் தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் பாம்பு பிடிக்கும் வல்லுனர்கள் உதவியுடன் அதனை பிடிக்க முயன்றனர். ஆனால் புதரில் இருந்து வெளி யேறிய பாம்பு அருகில் இருந்த கால்வாய்க்குள் நுழைந்து விட்டது. ஆனாலும் கால்வாய் நீரில் இறங்கி சுமார் ஒரு மணி  நேர போராட்டத்திற்கு பின்னர்  ராஜநாகத்தை வனத்துறையி னர் பிடித்தனர். இதன்பின் னர் பிடிபட்ட ராஜநாக பாம் பின் நீளத்தை அளந்த பின்னர் அதனை பர்லியார் அடுத்துள்ள அடர்ந்த மலைக்காட்டினுள் விடுவித்தனர். சுமார் ஒன்பதடி நீளமுள்ள ராஜநாகமான இப் பாம்பு தனது இரை மற்றும் இணை  தேடி அடர்ந்த மலைக்காட்டில் இருந்து வந்துள்ளதாக வனத் துறையினர் தெரிவித்தனர். 

ராஜநாகங்கள் ஆண்டு முழு வதும் சீரான சீதோஷின நிலை நிலவும் மிக சில பகுதிகளில் மட்டுமே வாழக்கூடியவை. தான் வசிக்கும் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்கு வேறு ராஜநாக பாம்புகளை இருக்க விடாது. இவை எளிதில் மக்கள் வசிக்கும் பகுதிக்கு வராது. நீலகிரி மலை யடிவாரத்தில் அமைந்துள்ள கல்லார் பகுதியில் சீரான சீதோ ஷினம் மற்றும் வனம் சார்ந்த நீராதாரங்கள் உள்ளதால் இந்த  அரிய வகை ராஜநாகம் மட்டு மின்றி மரத்திற்கு மரம் தாவி பறக் கும் பாம்பு வகைகளும் உள்ளன. ராஜநாகங்கள் மனிதர்களை கடித்தால் உடல் கருத்து உடனடி மரணம் நிகழும் என்பதால் இது போன்ற கடும் விஷமுள்ள பாம்பு களை கண்டால் அதனை அடிக் கவோ விரட்டவோ பொதுமக்கள் முயன்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். பாம்புகளை கண்டால் உடனடியாக வனத்துறையின ருக்கு தகவல் தெரிவித்தால் அவை பாதுகாப்பாக பிடிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். ஒரே இடத்தில் அடுத்தடுத்து ராஜ நாகங்கள் பிடிபடுவதால் கல்லார் பகுதி மக்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.