tamilnadu

img

காஷ்மீரில் சீத்தாராம் யெச்சூரி, து.ராஜா கைது

ஈரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆவேசம்

ஈரோடு, ஆக. 9- காஷ்மீர் மாநிலத்தில் சிறை வைக் கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முகமது யூசுப் தாரிகாமி உள்ளிட்ட தலைவர்களை பார்ப்பதற்காக ஜம்முவிற்குச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச் சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா ஆகி யோரைக் கைது செய்ததைக் கண் டித்து ஈரோட்டில் மாவட்டத்தில் பல் வேறு இடங்களில் ஆவேச ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு ஈரோடு நகர செயலாளர் பி. சுந்தரராஜன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் ஆர். ரகு ராமன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ப.மாரிமுத்து, ஜி.பழனிசாமி,  எஸ்.சுப்ரமணியன், ஆர்.கோமதி, வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொரு ளாளர் எஸ்.ஸ்டாலின், மாதர் சங்கத் தின் மாவட்ட செயலாளர் பி.எஸ்.பிரசன்னா மற்றும் வெகுஜன அமைப்பு களின் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல,  பெருந்துறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் கே.குப்புசாமி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் கே.ரவி, கட்சியின் தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சிவகிரி கடை வீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செய லாளர் கே.டி.கனகவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப் பினர் ஆர்.விஜயராகவன், வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.சசி, கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகி பெருமாள், வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள் தாலுகா நிர்வாகிகள், கிளை செய லாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.  இதேபோல், சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே மாவட் டக் குழு உறுப்பினர் இரா.திருத்தணி காசலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்  சத்தி தாலுகா செயலாளர் விஜயகுமார், நகர செய லாளர் பி.வாசு உள்ளிட்ட பலர் பங் கேற்றனர்.  நசியனூர் பகுதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு கிளைச் செயலாளர் பி.சுப்பிரமணி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனிசாமி, ஈரோடு தாலுகா செயலாளர் எம்.நாச்சிமுத்து,  மாதர் சங்கத்தின் மாவட்ட தலை வர் பி.லலிதா, தாலுகா கமிட்டி உறுப்பினர்கள், விவசாய தொழிலா ளர்கள் சங்கத்தின் தாலுகா நிர்வாகி கள் மற்றும் கிளை செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். அந்தியூரில் ஆட்டோ ஸ்டேண்ட் அருகில் தாலுகா செயலளர் ஆர்.முரு கேசன் தலைமையில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.வி.மாரிமுத்து  கண்டன உரையாற்றினார். இந்த  ஆர்ப்பாட்டத்தில்  தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.