கோவை, அக். 11 – கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ஆரம்பசுகாதார நிலையம் இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோவை மாவட்டம், ஆவாரம்பாளை யம் பகுதியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் வசித்து வருகின்றனர். நெரிசல் மிகுந்த இப்பகுதியில், பல வருடமாக ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்ற னர். இதனால் குழந்தைகளுக்கு சிறிது காய்ச்சல் ஏற்பட்டாலே தொலைவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில், ஷோபனா நகரில் ஆரம்ப சுகாராத நிலை யம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டும் பல வரு டங்களாக அப்பணி கிடப்பில் உள்ளது. எனவே, இப்பணியை விரைந்து முடித்து தங்களை நோய்த்தொற்றிலிருந்து காக்கு மாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.