பொள்ளாச்சி, அக். 11- பொள்ளாச்சி நகராட்சி 10 வது வார்டுக்குட்பட்ட பகுதி யில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியை சரி செய்து சாலையை சீரமைத்திட வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சி 10 வது வார்டுகுட்பட்ட நந்தனார் காலனி, கதிரவன் நகர், சேதுபதி நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இப்பகுதிகளில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் இரண்டு ஆண்டுகளாக சரி செய்யப்படாமல் உள்ளதால், சாலை பழுதடைந்து அதிகம் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதிமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதம டைந்த சாலையை உடனடியாக சரிசெய்ய நகராட்சி நிர் வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.