இளம்பிள்ளை, பிப்.11- கல்பாரப்பட்டியில் சாலையின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், கல்பாரப்பட்டி ஊராட் சிக்குட்பட்ட பகுதியில் இருந்து வேம்படிதாளம் செல்லும் சாலை யின் இருபுறமும் உள்ள பாறைகளை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சமூக விரோதிகளால் கற்கள் உடைத்து சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுள்ளது. அதை மூடா மல் அப்படியே விட்டதால் இரு புறமும் 50 அடி ஆழத்திற்கு மேல் அபாய குட்டை உருவாகி உள்ளது. இதனால் அவ்வழியாகச் செல்லும் பள்ளி குழந்தைகள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற் குள்ளாகி வருகின்றனர். இதனால் விபத்துக்கள் நடக்க வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. ஆகவே, இவ்விடத்தில் பெரிய விபத்து எதுவும் நடக்கும் முன்பு தடுப்பு சுவரோ அல்லது குழியை மூடவோ வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.