tamilnadu

img

தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கிடுக ஆதித்தமிழர் பேரவை ஆட்சியரிடம் வலியுறுத்தல்

கோவை, செப். 22– கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட் டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கக்கோரி ஆதித்தமிழர் பேர வையினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கோவை ரவிக்குமார், கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தாமரை வீரன் ஆகியோர் தலைமையில் ஆட்சியரி டம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது, கொரோனா காலத்தில் முன்களப் பணியாளர்களாக கோவை மாநகராட்சி யில் ஏராளமான தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்தொழிலா ளர்களுக்கு கொரோனா சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். மேலும், ஒப்பந்த தொழி லாளர்களாக பணிபுரியும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 வழங்க வேண்டும். இவர்களுக்கு இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட வைகளை அமல்படுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனு வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;