மார்க்சிஸ்ட் கட்சி தர்ணா - மனு கொடுக்கும் போராட்டம்
கோவை, நவ. 26- கோயில் நிலங்களில் குடியி ருப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்கிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணா மற்றும் மனு கொடுக்கும் போராட் டத்தில் ஈடுபட்டனர். அரசு மற்றும் கோயில் நிலங் களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் மக்களுக்கு அர சாணை எண்,318/2019 ன்படி நில வகை மாற்றம் செய்து வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். சொந்த வீட்டுமனை இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வீட்டு மனை, மனைப்பட்டா வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி செவ் வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவ தும் பெருந்திரள் தர்ணா மற்றும் மனு கொடுக்கும் போராட்டம் நடை பெற்றது. கோவை சிவானந்தா காலனி யில் நடைபெற்ற தர்ணா போராட் டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராம மூர்த்தி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநா பன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எஸ்.கருப்பையா, கே.மனோ கரன், என்.பாலமூர்த்தி, கே.எஸ். கனகராஜ், முன்னாள் சட்டபேரவை உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற் றனர். ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆனைமலை தாலுகா செயலாளர் வி.எஸ்.பரம சிவம் தலைமை வகித்தார். இப் போராட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் கே.அஜய் குமார், பொள்ளாச்சி தாலுகா செய லாளர் கே.மகாலிங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட் டத் தலைவர் ஏ.துரைசாமி உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண் டனர்.
ஈரோடு
ஈரோடு தாலுகா அலுவலகத் தில் நடைபெற்ற மனுகொடுக்கும் போராட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலாளர் பி.சுந்தரராஜன், தாலுகா செயலாளர் எம்.நாச்சி முத்து ஆகியோர் தலைமை வகித் தனர். மாவட்ட செயலாளர் ஆர்.ரகு ராமன், மாவட்ட செயற்குழு உறுப் பினர் எஸ்.சுப்ரமணியன், மாவட்ட குழு உறுப்பினர்கள் அண்ணா துரை, ஸ்ரீராம் உட்பட திரளா னோர் கலந்துகொண்டனர்.