tamilnadu

img

பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பென்சன் வழங்கிடுக: கோவை மண்டல மாநாடு கோரிக்கை

திருப்பூர், ஜூன் 25- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு மாநில அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி பிரதிமாதம் முதல் தேதி ஓய்வூதியம் வழங்குமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் கோவை மண்டல 5ஆவது மாநாடு கோரியுள்ளது. திருப்பூர் ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் செவ்வாயன்று ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மண்டல மாநாடு தொடங்கியது. மாநாட்டு அரங்க முகப்பில் சங்கக் கொடியை துணைச் செயலாளர் டி.நாச்சிமுத்து ஏற்றி வைத்தார். மண்டலத் தலைவர் ஜி.பழனிச்சாமி தலைமை ஏற்றார். துணைத் தலைவர்  ஆர்.கருப்புசாமி அஞ்சலித் தீர்மா னத்தை முன்மொழிந்தார். வரவேபுக் குழுச் செயலாளர் டி.துரைசாமி வர வேற்புரை ஆற்றினார். சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.கர்சன் மாநாட்டைத் தொடக்கி வைத்தார். காலை நடை பெற்ற பொதுமாநாட்டில் ஓய்வூதியர்  குடும்பத்தார் உள்பட பெருந்திரளா னோர் பங்கேற்றனர். இதையடுத்து பிரதிநிதிகள் மாநாடு  தொடங்கியது. மண்டலப்  பொதுச் செயலாளர் பி.செல்வராசன் வேலை அறிக்கையை முன்வைத்தார். பொரு ளாளர் எம்.கிருஷ்ணராஜ் வரவு செலவு  அறிக்கையை சமர்ப்பித்தார். இம்மாநாட்டில் 2015 நவம்பர் முதல் பஞ்சப்படி உயர்வு மற்றும் நிலுவைத் தொகை வழங்க வேண்டும்.  2010, 2013, 2016 ஒப்பந்த உயர்வு  அடிப்படையில் பென்சன், பணிக் கொடை லீவு சம்பளக் குறைவு தொகை  வழங்க வேண்டும். ஒப்பந்த உயர்வுகள் அடிப்படையில் பென்சனை மாற்றி உயர்த்த வேண்டும். 2018 ஏப்ரல் முதல் பணப்பலன் வழங்க வேண்டும், குடும்ப  ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய  நிலுவைகள் 15 சத உயர்வு, மருத்து வப்படி வழங்க வேண்டும்.மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலச்  செயலாளர் அ.நிசார் அகமது, சங்கத்தின் மாநிலத்  தலைவர் எஸ்.கிருஷ்ணன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். புதன் கிழமை இம்மாநாடு தொடர்ந்து நடை பெறுகிறது. மாநிலத் துணைப் பொதுச்  செயலாளர் ஆர்.தேவராஜ், அனைத் துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட் டத்தலைவர் க.சண்முகம், ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர் அமைப்பின் மாநிலச்செயலாளர் து. இராஜகோபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.