tamilnadu

img

ஆஷா திட்ட பணியாளர்களுக்கு மாத ஊதியம் குறைந்தபட்சமாக ரூ.7 ஆயிரம் வழங்கிடுக

தருமபுரி, ஆக.13- ஆஷா திட்ட பணியாளர் களுக்கு மாத ஊதியம் குறைந்த பட்சமாக ரூ.7 ஆயிரம் வழங்கக்கோரி சிஐடியு தருமபுரி மாவட்ட ஆஷா தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் செவ் வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   தருமபுரி மாவட்ட மலைக் கிராமங் களில் உள்ள மக்களின் சுகாதார மேம் பாட்டிற்காக மத்திய அரசின் பங்களிப் புடன் ஆஷா திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 100க்கும்  மேற்பட்ட  பெண்கள் ஆஷா பணியாளர் களாக உள்ளனர். மிகுந்த அர்ப்பணிப் போடு மலைப்பகுதிகளில் சேவையாற்றி வருகின்றனர். இவர்களின் மாத ஊதியம் ரூ.610 ஆகும். இந்த சம்பளத்தை கடந்த 10 மாதங்களாக வழங்கப்படவில்லை. ஆனால்  மற்ற மாநிலங்களில் இத்தொழிலாளர் களுக்கு மாதச்சம்பளமாக ரூ.7ஆயிரம் வழங்கப்படுகிறது. இவர்களின் கோரிக் கைகளை உயர் அதிகாரிகளிடம் தெரி வித்தால் அநாகரிகமாக நடத்தப்படுகின்ற னர். எனவே ஆஷா ஊழியர்களுக்கு முறை யாக மாதச்சம்பளம் வழங்கப்படவேண்டும். ஆண்டுக்கு 4 முறை  சீருடை தரத்துடன் மற்றும் தையற்கூலி  வழங்க வேண்டும். மருத் துவத்துறை வரவு-செலவு தணிக்கை குழு முடிவின்படி வழங்கப்பட்ட அலவன்ஸ் பிஎம்ஒ மூலம் திரும்ப வசூலிக்கும் முடிவை  கைவிட வேண்டும். ஆஷா பெண் பணி யாளர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டுமென முழக்கங்கள் எழுப்பினர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத் தலைவர் எஸ்.மேகனா தலைமை தாங்கி னார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. நாகராசன், மாவட்டப் பொருளாளர் ஏ. தெய்வானை, உழைக்கும் பெண்கள் ஒருங் கிணைப்புக் குழு மாவட்ட அமைப்பாளர் சி.கலாவதி, ஆஷா சங்க நிர்வாகிகள் தீபா, நந்தினி, உமா, அம்பிகா  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக, பொரு ளாளர் ருக்குமணி நன்றி கூறினார்.