tamilnadu

img

புதிய செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு

திருப்பூர், ஆக. 17- திருப்பூரில் புதிய செல்போன் டவர் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் கொங்கு மெயின் ரோடு  எம்.எஸ். நகர் பகுதியில் வி.ஆர்.பி.நகர் குடியிருப்பு உள்ளது. இங்கு 2 ஆயிரத் திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் சிதிலமடைந்த அடுக் குமாடி குடியிருப்பு ஒன்றின் மொட்டை மாடியில் புதிதாக செல்போன் டவர் அமைக்க தனியார் நிறுவனத்தின் சார்பில் இரவு பகலாக பணிகள் நடைபெற்று வந்தது. இதையறிந்து இப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சனியன்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி செல்போன் டவர் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. இதை யடுத்து ஒன்றுதிரண்ட அப்பகுதி மக்கள் செல்போன் டவர் அமைப்ப தற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இது தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திலும், மாநகராட்சி ஆணையரிடமும் மனு அளித்தனர். இம்மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப் பதாக உறுதியளித்ததன் பேரில் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகை யில், சிதிலமடைந்த கட்டிடத்தின் மீது செல்போன் டவர் அமைத்தால், அது எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் என்ற அச்சம் நிலவுகிறது. மேலும் அருகிலுள்ள வீடுகளுக்கும் கதிர்வீச்சு தாக்குதல் ஏற்படும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் செல் போன் டவர் அமைக்கக்  கூடாது என்று  தெரிவித்தனர்.