tamilnadu

img

தலித் மாணவன் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோவை, அக்.16- மதுரை அருகே பாலமேடு மரவபட்டி அரசு பள்ளியில் அருந்ததிய மாணவன் சரவணகுமார் தாக்கப்பட்டதை கண்டித்து கோவையில் திராவிடர் தமிழர் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம், பாலமேடு மரவ பட்டி அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயிலும் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த வர் மாணவன் சரவணகுமார். இம்மாண வனை கடந்த அக்.13 ஆம் தேதியன்று அதே பள்ளியில் பயிலும் மாணவன் ஈஸ்வரன் என்பவர் சாதிய வன்மத்தோடு  பிளேடு கொண்டு தாக்கியுள்ளார். இதில் முதுகு பகுதியில் பலத்த காயம் அடைந்த சரவணகுமார், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இச்சம்பவத்தை கண் டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு திராவிட தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கதிரவன் தலைமை யில், அமைப்பின் தலைவர் வெண்மணி முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில் சரவணகுமார் மீதான சாதி வெறி தாக்குதலை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.  மேலும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் நடைபெறும் தீண் டாமை வன்கொடுமைகளில் ஈடுபடு வார்கள் மீது அரசு கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.