tamilnadu

img

தனியார் சிட்பண்ட்ஸ் மோசடி - காவல் ஆணையரிடம் புகார்

கோவை, ஜூலை 20- தனியார் சிட்பண்ட்ஸ் நிறுவனம் ஏமாற்றிய பணத்தைத் திரும்பப் பெற்றுத் தர வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் சனியன்று கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தை முற்று கையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  கோவை காந்திபுரம் 100 அடி சாலை யில் முத்து லேண்ட் மற்றும் முத்து சிட் பண்ட்  என்ற பெயரில் தனியார் சீட்டு கம்பெனி சுமார் 8 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. இந்த சீட்டு கம்பெனியின் உரிமையாளர் தமிழக வியாபாரிகள் சம் மேளனத்தின் தலைவர் பரமசிவம். இவர் தங்க நகைச் சீட்டு, மாதச் சீட்டு, நில சீட்டு போன்ற நிதி நிறுவனங்களை முத்து சிட் பண்ட் என்ற பெயரில் நடத்தி வருகிறார்.  இவரது நிதி நிறுவனம் குறித்து தினசரி நாளிதழ் மூலம் வந்த விளம்பரங்களைப் பார்த்துச் சென்ற பொதுமக்கள், தங்கநகை சீட்டு, மாத சீட்டு மற்றும் நில சீட்டு என  அனைத்திலும் பணம் செலுத்தி வந்துள் ளனர். இதில், மாத சீட்டு மூலம் மாதம் ஆயி ரம் வீதம் 24 மாதங்களுக்கு பெற்று, அவர்களிடம் பணம் திரும்பக் கொடுக்கும் பொழுது ரூ. 32,000 ஆக வட்டியுடன் சேர்த்து  தருவதாக கூறியதை நம்பி, பொதுமக்கள் சீட்டில் சேர்ந்துள்ளனர். 250-க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த சிறு சேமிப்புத் திட்டத்தில் பணம் போட்டு வந்துள்ளனர். இரண்டு வருடம் கட்டி முடிந்த நிலையில், அவர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை சரியான முறையில் வழங்கவில்லை என பல்வேறு புகார்கள் எழுந்தன.  இதையடுத்து பணத்தை கொடுத்த பொதுமக்கள் அலுவலகத்தில் கேட்ட பொழுது, அந்நிறுவனத்தினர் பண மாக இல்லை என்றும், காசோலையாக பெற்றுக் கொள்ளுங்கள் என அனைவரி டமும் காசோலையை அளித்துள்ளனர். வாடிக்கையாளர்கள், வாங்கிச் சென்ற காசோலையை வங்கியில் அளித்தபோது கணக்கில் பணம் இல்லை என தெரிவிக் கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளியன்று காந்திபுரம் பகுதியில் உள்ள அலுவல கத்தை முற்றுகையிட்டனர். இதனைய டுத்து சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்திய ரத்தினபுரி காவல் துறையினர்  இதுகுறித்து உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த னர்.  ஆனால் காவல் துறையினரின் வாக்கு றுதிப்படி நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்து வருவதால், பாதிக்கப்பட்டவர்கள் சனியன்று கோவை மாநகர காவல் ஆணை யாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  அப்போது, சீட்டு கம்பெனி நிறுவனத்தின் உரிமையாளர் பரமசிவத்தை கைது செய்ய வேண்டும். நாங்கள் ஏமாந்த பணம் உடனடியாகக் மீட்டுத்தர நடவடிக்கை  எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். முன்னதாக ரூ.32 கோடிக்கு மேல் ஏமாற்றப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட வர்கள் புகார் மனு அளித்தது குறிப்பிடத் தக்கது.