கோவை, ஆக.20- கோவை - அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிட சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிய 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் ஏற்கனவே சுவர்கள் ஈரமாகி சில வீடுகள் இடிந்து விழுந்தன. இந்நிலையில், செவ்வாயன்று மீண்டும் மழை பெய்தது. இந்நிலையில் அவினாசி சாலையில் உள்ள சிஐடி தனியார் கல்லூரியின் (கோயம்புத்தூர் பொறியியல் கல்லூரி) விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. புதிதாக நடந்து வரும் அடுக்குமாடி கட் டிடப் பணியின் போது, 2-ம் தளத்தில் போடப்பட்டு வந்த பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில், 2-ம் தளத்தில் போடப்பட்டு வந்த கம்பிகள் கீழே சரிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கட்டிடப் பணியில் ஈடுபட்டு வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பணியாளர்கள் 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் நால்வரும் ஆம்பு லன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை யடுத்து அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினர். இச்சம்பவத்தால் அப்பகுதி யல் பரபரப்பை நிலவியது.