பொள்ளாச்சி, நவ. 5- பொள்ளாச்சி சாலையில் தேங்கும் கழிவுநீரை அப்புறப் படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி தேர் நிலையம் அருகில் கழிவுநீர் சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு சாலை முழுவதும் கழிவுநீர் செல்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்களும், வாகனஓட்டிகளும் பெரும் சிரமத்திற்குள் ளாகி வருகின்றனர். மேலும், இந்த கழிவுநீர் சாக்கடை உடைப்பிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு சாலை யில் சாக்கடை நீர் தேங்கி குட்டை போல காட்சியளிக்கிறது. இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள் ளது. எனவே, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சாக்கடை கால்வாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.