tamilnadu

img

அவிநாசியில் காமராஜர் பிளக்ஸ் பேனர் சேதம் புகார் வாங்க காவல்துறையினர் மறுப்பு

அவிநாசி, ஜூலை 16- அவிநாசியில், காம ராஜர் பிறந்த நாள் பேனரை  சமூக விரோதிகள் சேதப் படுத்தி உள்ளனர். இது குறித்த புகாரை காவல் துறையினர் வாங்க மறுத் துள்ளனர்.     காமராஜர் பிறந்த தினம் ஜூலை 15 தேதி யாகும். இதையொட்டி காமராஜர் புகழ் பாடும் குயில்கள் அமைப்பு சார்பில் அவிநாசி காவல்  நிலையம் அருகில் பேனர்  வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில்   அவிநாசி நகர் சேவூர் சாலைப் பகுதி யில் போக்குவரத்து நெருக்கடி அதிக ளவில் உள்ளதால், 10 அடி அகலத்தில்  10 ஆயிரம் வாகனங்கள் செல்கின்றது.  இதனால் பொதுமக்கள் உயிரைப்  பிடித்துச் செல்லவேண்டியுள்ளது. இதை நெடுஞ்சாலைத்துறையும், போக்கு வரத்துத்துறையும் கண்டுகொள்வதில்லை. செத்த பிறகு தான் சாலையை விரிவு படுத்துவார்களா என குறிப்பிடப் பட்டிருந்தது. இப்பேனர் ஞாயிற்றுக் கிழமை  வைக்கப்பட்டன.  திங்கள்கிழமை  காலையில் பார்த்த போது பேனர் முழு வதும் சேதப்படுத்தப்பட்டிருந்தது.  பேனரை சேதப்படுத்திய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிவழக்குரைஞர் கோபால கிருஷ்ணன்  அவிநாசி காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். ஆனால் காவல்துறை யினர் புகாரை வாங்க மறுத்துவிட்டனர்.  இதன்பின் செவ்வாயன்று வழக்குரைஞர்  கோபாலகிருஷ்ணன் இணையதளத்தின்  மூலம் புகார் பதிவு செய்தார்.