கோவை, மார்ச் 5- கோவை கணபதி அருகே பள்ளி வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இஸ்லாமிய அமைப்பினர் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். கோவை கணபதி ரூட்ஸ் கம் பெனி எதிரில் உள்ள வேதம்பாள் நகர் பகுதியில் ஹிதயதுல்லா முஸ் லிம் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் உள்ளது. இப்பள்ளிவாசல் மீது அடையாளம் தெரியாத நபர்கள் புத னன்று இரவு ஒரு மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப் பிச் சென்றனர். இச்சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற் படவில்லை. இதுகுறித்து தகவ லறிந்த சரவணம்பட்டி காவல்துறை யினர், உடனடியாக சம்பவ இடத் திற்கு விரைந்து வந்த அந்த பகுதி யில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கோவை வடக்கு மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லா மிய இயக்கங்களின் கூட்டமைப்பி னர் கோவை மாநகர காவல் ஆணை யாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். மேலும், இச்சம்பவத்தை கண் டித்தும், அமைதி பூங்காவான கோவையில் தமது சொந்த கார ணங்களுக்காக ஏற்பட்ட மோதல் களை மத மோதல்களாக சித்தரித்து மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் இந்து முன்னனி மற்றும் பாசிச இயக்கங்களை கண்டித்தும் வெள்ளி யன்று கடையடைப்பு நடத்தவும் சில இஸ்லாமிய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளது.