tamilnadu

img

சமுதாய நலக்கூடத்தில் இயங்கி வரும் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர கோரி மனு

நாமக்கல், ஜூலை 15- மலையம்பாளையம் ஆதிதிராவிடர் தெருவில் சமுதாய நலக்கூடத்தில் இயங்கி வரும் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.  நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், மலையம் பாளையம் ஆதிதிராவிடர் தெருவில் 100க்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மலையம் பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் கட்டிடம்  இடிந்து விழும் நிலையில் இருந்ததை அடுத்து பள்ளியின் கட்டிடத்தை முழுமையாக இடித்து விட்டனர். இடித்து இரண்டு வருடங்களாகியும் இடிக்கப்பட்ட கட்டடத்தில் புதிய கட்டிடம் கட்டாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால், இப்பகுதியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பல்லவன்நாயக்கன்பட்டியில் சமு தாய கூடத்தில் படித்து வருகின்றனர். அங்கு இட வசதிகள் இல்லாத காரணத்தால் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 10க்கும் மேற்பட்ட கிரா மத்திலிருந்து 200க்கும் அதிகமான குழந்தைகள் படித்து வருகின்றனர். எனவே பள்ளி கட்டிடத்தை விரைவில் புதிதாக கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆடசியர் மு. ஆசியா மரியத்திடம் மனு அளித்தனர்.