tamilnadu

img

மாநில வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவின் படி உதவித்தொகை வழங்கிடுக

ஈரோடு, ஆக. 20- மாநில வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவின் படி மாற்றுத்திறனாளிகளுக்கு வட் டாட்சியர்கள் உதவித்தொகை வழங்க வேண்டும் என வலியு றுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் சார்பில் கோபி வருவாய் கோட்டாட்சியர் அலு வலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவுப்படி மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் செவ் வாய்க்கிழமை நடத்திட வேண் டும். அக்கூட்டத்தில் அரசு மருத் துவர்களை வரவழைத்து அடை யாளச் சான்று, பேருந்து, ரயில் பாஸ் உள்ளிட்டவற்றை அங் கேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலையில் மாநில வருவாய் நிர்வாக ஆணை யர் உத்தரவின் படி மாற் றுத்திறனாளிகளுக்கு வட்டாட்சி யர்கள் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் சட்டப்படி கூலியும், 4 மணி நேர  வேலையும் வழங்கிட வேண் டும். அரசு மற்றும் பொது இடங்க ளில் சாய்தளம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கவேண்டும். கடம்பூர், தாளவாடி போன்ற மலைப் பகுதி களுக்கு தனித்தனியாக மூன்று  மாதத்திற்கு ஒருமுறை குறை தீர்க்கும் கூட்டம் நடத்த கோட் டாட்சியர் ஆவண செய்திட வேண் டும். மாற்றுத் திறனாளிகள் வசிக்கும் பகுதியில் வீட்டுமனை மற்றும் தொகுப்பு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடை பெற்றது. இப்போராட்டத்திற்கு சங் கத்தின் மாநிலத் துணைத் தலை வர் பி.எஸ்.பாரதி அண்ணா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் டி.சுப்பிரமணி, மாவட்ட தலைவர் கே.எம்.பாலு, மாவட்ட பொருளாளர் என்.சின்னு சாமி, மாவட்ட துணை செயலா ளர் எஸ்.ஏ.ராமதாஸ், மாவட்ட குழு உறுப்பினர் டி.முருகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட நிர் வாகிகளுடன் கோபி வருவாய் கோட்டாட்சியர் ஜெயராமன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக் கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தார். அதன் அடிப் படையில் அனைவரும் காத்தி ருக்கும் போராட்டத்தை  கைவிட்டு கலந்து சென்றனர்.